மதுரை சித்திரை திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய போலீசார்க்கு மாநகர காவல் ஆணையர் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார் மதுரை மாநகர் காவல் துறை சார்பில் உலகப்புகழ் சித்திரை திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய போலிசார்க்கு பாராட்டு விழா மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநகர் காவல் ஆணையர் தலைமை தாங்கினார். மற்றும் இணை துணை ஆணையர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் திருக்கோயில் ஆணயர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Month: May 2023
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே பள்ளி மாணவி பலி
தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே பள்ளி மாணவி பலி கடத்தூர் அடுத்து வேப்பிலைப்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி இவரது மகள் சுபா இவர் அவரது தோட்டத்தில் ராகி கதிரடிக்கும் இயந்திரத்தில் சிக்கி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் தகவல் அறிந்து வந்த கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏ.டி.எம். கொள்ளையர்களை கைது செய்த வேலூர் சரக தனிப்படையினருக்கு டிஜிபி அவர்கள் ஒரு லட்சம் ரொக்கபரிசு அளித்து கவுரவித்தார்.
ஏ.டி.எம். கொள்ளையர்களை கைது செய்த வேலூர் சரக தனிப்படையினருக்கு டிஜிபி அவர்கள் ஒரு லட்சம் ரொக்கபரிசு அளித்து கவுரவித்தார். இதை பற்றிய விபரம் பின் வருமாறு, தமிழகத்தையே உலுக்கிய திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்ய வேலூர் சரக காவல் துணைத் தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி, இ.கா.ப. அவர்கள் தனிப்படை ஒன்றை அமைத்தார். அவர்கள் வடமாநிலங்களுக்கு நேரில் சென்று துப்பாக்கி முனையில் இந்த கொள்ளை தொடர்பான முக்கிய குற்றவாளிகளை கைது செய்தனர். அதில் தமிழகம் உள்ளிட்ட […]
2090 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த மதுரை காவலர்களுக்கு ரூ.1 இலட்சம் வெகுமதி வழங்கி பாராட்டிய டிஜிபி அவர்கள்.
2090 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த மதுரை காவலர்களுக்கு ரூ.1 இலட்சம் வெகுமதி வழங்கி பாராட்டிய டிஜிபி அவர்கள். கடந்த 09.05.2023 அன்று மதுரை மாநகர் கீரைத்துறை காவல்நிலைய காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோதனையில் ஒரு காரில் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஆந்திராவிலிருந்து போலியான பதிவு எண் கொண்ட சரக்கு வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தி வரப்பட்டு தூத்துக்குடி மாவட்டம், மேலவர் புதுக்குளம் என்ற கிராமத்தில் பதுக்கி வைத்திருப்பது […]
ரூ.25 லட்சம் மதிப்பிலான 64 செண்ட் நிலத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்
ரூ.25 லட்சம் மதிப்பிலான 64 செண்ட் நிலத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரவேலு (வயது81). இவருக்கு சொந்தமான ரூ. 25 லட்சம் மதிப்பிலான 64.5 செண்ட் நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சங்கரவேலு என்பவர் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மோசடி செய்து மற்றொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சங்கரவேலு கடந்த 2-ந்தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் டி.எஸ்.பி. முத்துப்பாண்டி அறிவுறுத்தலின் […]
தென்காசியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் காரை திருடி சென்ற மர்ம நபர்
தென்காசியில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் காரை திருடி சென்ற மர்ம நபர் தென்காசி டி.என்.ஹெச்.பி. காலனியை சேர்ந்தவர் ஜெய்சிங் (வயது 73). இவர் ஊரக வளர்ச்சித் துறையில் பிளம்பிங் பிட்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 5-ந் தேதி நெல்லையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு ஜெய்சிங் தனது மனைவியுடன் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலையில் ஜெய்சிங்கின் வீட்டின் முன்பக்க கேட் திறந்து கிடந்ததால் […]
வேதிப்பொருட்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை: கலெக்டர் தகவல்
வேதிப்பொருட்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்தால் நடவடிக்கை: கலெக்டர் தகவல் கடலூர் மாவட்டத்தில் பழ வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பழங்கள் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லரை வணிகர்கள் பங்கேற்றனர். கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறியிருப்பதாவது: மாம்பழம், அன்னாசி, பப்பாளி, வாழைப்பழம் மற்றும் சப்போட்டா போன்ற பழ வகைகளை செயற்கை முறையில் கால்சியம் கார்பைடு கற்களை கொண்டோ அல்லது செயற்கை வேதிப் பொருட்களை தெளித்தோ பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், […]
கடலூர் அருகே முன்விரோத தகராறில் இரு தரப்பினருக்குள் மோதல்: 4 பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு
கடலூர் அருகே முன்விரோத தகராறில் இரு தரப்பினருக்குள் மோதல்: 4 பெண்கள் உட்பட 7 பேர் மீது வழக்கு கடலூர் அருகே முன் விரோத தகராறில் இரு தரப்பினருக்குள் மோதல் ஏற்பட்டது.கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு வி. பெத்தாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசூர்யா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கும் முன் விரோத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஜெய்சூரியாவும், பழனிவேலுவும் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் ஞானசவுந்தரி, வள்ளி ஆகிய […]
மதுரை பரவையை சேர்ந்த பெண்ணிடம் 12 பவுன் நகை திருடிய 2 பேர் கைது
மதுரை பரவையை சேர்ந்த பெண்ணிடம் 12 பவுன் நகை திருடிய 2 பேர் கைது மதுரை பரவை பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த வாரம் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு புறப்பட்டார். மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் குடும்பத்தினருடன் நின்று கொண்டே பயணம் செய்ததாக தெரிகிறது. அவர்கள் பயணித்து வந்த அரசு பஸ் மண்டேலா நகர் பகுதியில் வந்தபோது, அந்த நபரின் […]
மதுரை மேலமடையில் வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு
மதுரை மேலமடையில் வீட்டின் கதவை உடைத்து பணம் திருட்டு மதுரை மேலமடையை சேர்ந்தவர் ராஜேசுவரி (70). சம்பவத்தன்று இவர் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் இருந்த ரூ.7ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோசாகுளம் திருமலை நகரை சேர்ந்தவர் சலீம் (61). இவர் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை […]