ஊர் காவல் படையினரின் வாழ்வாதாரம் காப்பாற்பட வேண்டும் ஊர்காவல் படையினரின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் பற்றி ஒரு அலசல் நண்பர் விவேகானந்தன் அவர்களின், கருத்தைப்பற்றி இங்கே ஒரு சில வரிகள் கவனிக்கலாம். தமிழ்நாட்டில் 1963 ம் ஆண்டு ஊர்காவல் படை என்னும் அமைப்பை ஏற்படுத்தப்பட்டு இன்று வரை காவல்துறையில் அனைத்து விதமான பணிக்கும் அவர்களை ஈடுபடுத்தி பணி செய்து வருகின்றார்கள் தமிழ்நாட்டில் சுமார் 16000 பேர் பணியாற்றி வருகின்றார்கள் அவர்களுக்கு மாதம் முழுவதும் இருந்த பணியை குறைத்து மாதத்திற்கு […]
Day: June 26, 2021
கோவை மாவட்ட காவல்துறை பேரூர் உட்கோட்டம் வடவள்ளி காவல் நிலையம் சார்பாக சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் இன்று நாள் 26.06.2021 மாலை 5 மணி அளவில் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி மாவட்ட காவல் சரக டி.ஐ.ஜி MS முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார் இவ்விழாவில் மாவட்ட கண்காணிப்பாளர் S செல்வநாகரத்தினம் அவர்கள் போதை பொருள்களினால் ஏற்படும் தீமைகளை பற்றி சிறப்பாக உரையாற்றினார் விழாவினை ஏற்பாடு செய்த பேரூர் உட்கோட்டம் வடவள்ளி காவல் நிலையத்தின் துணைக் கண்காணிப்பாளர் திருமால் அவர்களும் காவல் நிலையத்தின் […]
மதுரை மாவட்டம் மேலூருக்கு புதிய டி.எஸ்.பி நியமனம்
மதுரை மாவட்டம் மேலூருக்கு புதிய டி.எஸ்.பி நியமனம் மதுரை மாவட்டம் மேலூரில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த திரு. ரகுபதிராஜா அவர்கள் கோவை மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். 3 வாரமாகியும் புதிய டி.எஸ்.பி., நியமிக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி டி.எஸ்.பி.,யாக இருந்த திரு. பிரபாகரன் அவர்களை மேலூர் டி.எஸ்.பி.,யாக நியமித்து டிஜிபி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.
கந்து வட்டி வாங்கினால் புகாா் தெரிவிக்கலாம்: காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகர்
கந்து வட்டி வாங்கினால் புகாா் தெரிவிக்கலாம்: காஞ்சிபுரம் எஸ்.பி. சுதாகர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் யாரேனும் கந்து வட்டி வாங்கினால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கோ அல்லது மாவட்டக் கட்டுப்பாட்டு அறைக்கோ தொலைபேசியில் புகாா் தெரிவிக்கலாம். தைரியமாக புகாா் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ரெளடிகளை ஒடுக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்வோா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். […]
காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி !
காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி ! நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்கும் விதமாக யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக காவல் துணை ஆணையாளர் ராசராசன் உளுந்தங்கஞ்சி வழங்கினார். இதில் ஆயுதப்படை உதவி ஆணையாளர் முத்தரசு ஆய்வாளர்கள் பேச்சிமுத்து ராணி மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்