முககவசம் தலைக்கவசம் அணியாதவர்களுக்கும் போக்குவரத்து விதிமீறியவர்களுக்கு அபராதம் திருப்பரங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் நடவடிக்கை மதுரை மாநகரில் சாலைவிதி மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர். இதில் முககவசம் தலைக்கவசம் அணியாதவர்களுக்கு அறிவுரை வழங்கி அபராதம் விதித்தனர்.
Day: June 20, 2021
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஒப்படைப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஒப்படைப்பு திண்டுக்கல்லில் கொரோனா, ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே வருவோரை தடுக்க மாவட்ட எல்லைகளில் 11 காவல் நிலையங்களுக்கு இரண்டு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் வாகனத் தனிக்கையில் ஈடுபட்டனர் இது வரை 6,400 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தற்போது தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. எனவே பறிமுதல் செய்த வாகனங்களை திரும்ப அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்பிரியா அவர்கள் உத்தரவிட்டார். […]
திண்டுக்கல் அருகே ரயில்வே நடை மேடையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
திண்டுக்கல் அருகே ரயில்வே நடை மேடையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரயில் நிலையத்தின் முதல் நடை மேடையில் உள்ள பெயர் பலகை அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் 2 மயில்கள் இறந்த நிலையில் கிடந்தன். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து அய்யலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்பேரில் அய்யலூர் வனக் காப்போளர் திருமதி கிரேசி உஷாதேவி, வன காவலர் தங்கராஜ், ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த மயில்களின் உடல்களை மீட்டனர். […]
ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாடு தேவர் பேரவை பிரமுகரின் இரு சக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு, ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை
ஒட்டன்சத்திரத்தில் தமிழ்நாடு தேவர் பேரவை பிரமுகரின் இரு சக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு, ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் இவர் தமிழ்நாடு தேவர் பேரவையில் மாநில துணைத் தலைவராக இருந்து வருகிறார் இந்த நிலையில் நேற்று இரவு தனது சொந்த வேலையாக திண்டுக்கல் புறவழிச் சாலை வழியாக வெளியே சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனம் திடீரென பழுதான நிலையில் வாகனத்தை சாலையின் ஓரமாக நிறுத்தி […]
மதுரை வாடிப்பட்டி அருகே நிலத்தகராறு குறித்து விசாரணைக்கு சென்ற போலீசாரின் மூக்கை கடித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
மதுரை வாடிப்பட்டி அருகே நிலத்தகராறு குறித்து விசாரணைக்கு சென்ற போலீசாரின் மூக்கை கடித்த இராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். மதுரைமாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் வயது 30 அவரது வீட்டின் அருகில் குடியிருந்து வருபவர் நவநீத கிருஷ்ணன் வயது 37, இராணுவ வீரர். இவர்கள் இருவருக்கும் இடப்பிரச் சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நவநீதகிருஷ்ணன் குடிபோதையில் பிரகாஷிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். உடனே அவர் மதுரை காவல் கட்டுப்பாட்டு அறை 100க்கு […]
மாஸ்டர் கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் வாட்ஸ்அப், இ-மெயிலில் புகார் அளிக்கலாம்: போலீசார் அறிவிப்பு
மாஸ்டர் கெபிராஜால் பாதிக்கப்பட்டவர்கள் வாட்ஸ்அப், இ-மெயிலில் புகார் அளிக்கலாம்: போலீசார் அறிவிப்பு சென்னை, அண்ணாநகர், ஹை இம்பேக்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஸ்கூல் ஜூடோ மாஸ்டர் கெபிராஜ் மீது ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. மேலும் கெபிராஜ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரோ அல்லது குற்றச்சாட்டோ இருந்தால் atccbcid@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமோ அல்லது வாட்ஸ்அப் எண் […]
மும்பையில் தடுப்பூசி மோசடி 5 லட்சம் சுருட்டிய 4 பேர் கும்பல் கைது
மும்பையில் தடுப்பூசி மோசடி 5 லட்சம் சுருட்டிய 4 பேர் கும்பல் கைது மும்பை: மும்பையில் தடுப்பூசி முகாம் நடத்தி மோசடி செய்தது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். காந்திவலி மேற்கு பொய்சரில் ஹிராநந்தனி ஹெரிடேஜ் ஹவுசிங் சொசைட்டி உள்ளது. இங்கு கடந்த மே மாதம் 30ம் தேதி தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்காக பிரபல மருத்துவமனையை சேர்ந்த ஒருவரிடம் பேசி ஏற்பாடு செய்தனர். இந்த முகாமில் 390 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கோவேக்சின் […]
சொத்துபிரச்சனை காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது
சொத்துபிரச்சனை காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவருக்கும் அவரது தம்பி அய்யாதுரை என்பவருக்கும் சொத்துப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக 18.06.2021 அன்று இரவு ஆறுமுகம் வீட்டிற்கு அருகே வைத்து அய்யாதுரை, அவரது மகன் மாலையப்பன், மற்றும் சேது வயது 28, ஆகியோர் ஆறுமுகத்தை வழிமறித்து அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து […]
சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் மீது வழக்கு பதிவு. வாகனம் பறிமுதல்.
சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட இருவர் மீது வழக்கு பதிவு. வாகனம் பறிமுதல். பழவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு.மோகன் குமார் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பழவூர் சாஸ்தா கோயில் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள், போலீஸாரை கண்டதும் வண்டியை நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். மேற்படி மணல் திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், ஆவரைகுளம் பகுதியை சேர்ந்த பிரபு வயது […]
சட்டவிரோதமாக மண் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது.
சட்டவிரோதமாக மண் திருட்டில் ஈடுபட்ட மூன்று நபர்கள் கைது. திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளாங்குளி பகுதியில் 18.06.2021 அன்று உதவி ஆய்வாளர் திரு. ராஜாமணி அவர்கள் மற்றும் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, வெள்ளாங்குளி பகுதியில் சட்டவிரோதமாக மண்ணை அள்ளிய வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த அய்யம்பெருமாள் வயது 37, முத்துப்பாண்டி வயது 35, மற்றும் ஒரு நபர் மீது வீரவநல்லூர் காவல் நிலையத்தில் u/s 379 IPC (sand theft)பிரிவின் […]