விபத்து, ஒலி இல்லாமல் மாசற்ற தீபாவளி கொண்டாட்டம் விபத்து, ஒலி இல்லாமல் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்.பொதுமக்களுக்கு மதுரை கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இந்த திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடு கின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் […]
Month: October 2022
மதுரை பேரையூர் பகுதியில் கார் மோதி தொழிலாளி பலி
மதுரை பேரையூர் பகுதியில் கார் மோதி தொழிலாளி பலி பேரையூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியானார்.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் அருகே உள்ள மதிப்பனூர் குழிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி(வயது43). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கோசலாதேவி அயன் கரிசல்குளத்திற்கு சென்றிருந்தார். அவரை கூப்பிட்டு வருவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் பேரையூர் சிலைமலைபட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார், அவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. […]
மதுரை திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு
மதுரை திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகைபறிப்பு திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.மோட்டார்சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து மர்ம நபர்கள் துணிகர கைவரிசை காட்டியுள்ளனர். திருமங்கலம் அருகே உள்ள தனக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் மீனா(வயது29). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் அவர் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் தன்னு டைய பிள்ளைகளை தனது சொந்த ஊரான அழகு ரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் விட்டு […]
14.10.2022 இன்று
திரு.நெல்சன் (Assistant Commissioner of police J2 Adyar) அவர்கள் தலைமையில் சமூக ஆர்வலர் திரு. பசுமை மூர்த்தி அவர்களால் பெசண்ட் நகர் எலியட்ஸ் சர்வீஸ் சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
14.10.2022 இன்றுதிரு.நெல்சன் (Assistant Commissioner of police J2 Adyar) அவர்கள் தலைமையில் சமூக ஆர்வலர் திரு. பசுமை மூர்த்தி அவர்களால் பெசண்ட் நகர் எலியட்ஸ் சர்வீஸ் சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. சென்னை பெருநகர காவல் J2 அடையாறு மாவட்டம் Thiru .NELSON ( Assistant Commissioner of police ) தலைமையில் சமூக ஆர்வலர் Thiru .PASUMAI MOORTHY அவர்கள் மூலம் J5 சாஸ்திரி நகர் காவல்துறை எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் எலியட்ஸ் சர்வீஸ் சாலையில் […]
திமுக கிளை செயலாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு….
திமுக கிளை செயலாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு…. பாஜக நிர்வாகி கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காரிமங்கலம் அருகேவுள்ள கொண்டிசெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி (48) திமுக கிளை செயலாளர் அதே பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகியான ராஜசேகருக்கும் (37) இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, கடந்த மாதம் 20 ம்தேதி ராஜசேகர் கோவிந்தசாமியை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது, இதில் மனமுடைந்த கோவிந்தசாமி பூச்சி மருந்து குடித்துவிட்டு மாட்டு கொட்டகையில் மயங்கியுள்ளனர், […]
மூதாட்டியை மீட்ட போலீசார்
மூதாட்டியை மீட்ட போலீசார் முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ஆனந்தியம்மாள் (வயது. 72).இவர் சற்று மன நலம் பாதித்தவர் உறவினர்கள் கைவிட்ட நிலையில் பாலக்கோடு, அமானி மல்லாபுரம், மாரண்டஅள்ளி ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்து கொண்டு இரவு நேரங்களில் சாலையோர பகுதிகளில் தங்கி வந்தார், தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் அவரை மீட்டு தர்மபுரியில் உள்ள முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்தார்.போலீசாரின் இந்த செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை […]
மாரண்டஹள்ளி அருகே கொதிக்கும் சாப்பாரில் விழுந்த குழந்தை உயிரிழந்தது .
மாரண்டஹள்ளி அருகே கொதிக்கும் சாப்பாரில் விழுந்த குழந்தை உயிரிழந்தது . தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த சாமனூர் ஜீவா நகரை சேர்ந்த அருணகிரி. இவரது மனைவி சுகுணா. இவர்களுக்கு,2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை,சுகுணா வீட்டில் சாம்பார் செய்த பாத்திரத்துடன் அதனை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு மாட்டிற்கு தண்ணீர் வைக்க வெளியே சென்றார். அப்போது தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்து வந்த ஒன்றரை வயதான, 2 வது மகள் தேன்மொழி தடுமாறி கொதிக்கும் சாப்பார் பாத்திரத்தில் […]
மதுரை புதூர் பகுதியில் வாளுடன் பதுங்கி இருந்த 4 வாலிபர்கள் கைது
மதுரை புதூர் பகுதியில் வாளுடன் பதுங்கி இருந்த 4 வாலிபர்கள் கைது மதுரை புதூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜெய்சங்கர் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் அவர் காந்திபுர கண்மாய் கரையில் ரோந்து சென்ற போது அங்கே 4 பேர் வாளுடன் பதுங்கி இருந்ததை கண்டு அவர்களை மடக்கி பிடித்து கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்ததில் அவர்கள் கடச்சனேந்தல் அய்யனார் காலனி சரவணன் என்ற கோளாறு சரவணன் வயது 26/22, புதூர் மாரியம்மன் […]
மதுரை பேரையூர் அருகே ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது
மதுரை பேரையூர் அருகே ரேசன் அரிசி கடத்திய இருவர் கைது மதுரை ஜெய்ஹிந்த்புரம் கார்த்திபாண்டி 22. (ரைஸ்மில் நடத்தி வருபவர்) செல்லூர் காதர்உசேன் 29, இருவரும் பேரையூர்அருகே பழையூரில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி 50 மூடைகளில் வைத்திருந்தனர். தகவல் அறிந்து குடிமை பொருள் பாதுகாப்பு அலுவலர்கள் அங்கு வந்தபோது, லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றனர். அதிகாரிகள் இருவரையும் கைது செய்து 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு’குட்டி காவலர்’ மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்
தமிழ்நாடு’குட்டி காவலர்’ மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 12.10.2022 அன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளைஇணைந்து ‘குட்டி காவலர்’ மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்தார். இளம் பள்ளிக் குழந்தைகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி நன்கு வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் மூலம் சாலைப் பாதுகாப்பு குறித்து கற்பித்து அவர்களை சாலைப் பாதுகாப்பின் தூதுவர்களாக […]