மதுரையில் செல்லூர் குலமங்களம் இணைக்கும் பல்லாங்குழிச்சாலை சரி செய்யப்படுமா? மதுரை மாநகர் செல்லூர்-குலமங்கலம் இணைப்பு முக்கிய சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வானங்களில் மக்கள் பயணிக்கின்றனர் நீண்ட நாட்களாக வைகை பெரியார் கூட்டு குடிநீருக்காக தோண்பட்டதில் ஆங்காங்கே மெகா பள்ளம் உள்ளது இச்சாலை மக்கள் பயன்படுத்த தகுதியில்லா சாலையாகவும் விபத்துக்களை ஏற்படுந்தும் வகையில் பல்லாங்குழி சாலையாக உள்ளது.இந்த சாலை வழியாகத்தான் மக்களை தேடி மருத்துவ வாகனங்களும், ஆம்புலென்ஸ் வாகனங்களும் வர வேண்டிய சூழல் உள்ளது கனரக வாகனங்களும், வேன்களும், […]
Day: November 13, 2022
மதுரை சாமி சன்னதியை சேர்ந்த மூதாட்டி காணவில்லை விளக்குத்தூண் போலீசார் விசாரணை
மதுரை சாமி சன்னதியை சேர்ந்த மூதாட்டி காணவில்லை விளக்குத்தூண் போலீசார் விசாரணை மதுரை சுவாமி சன்னதி, வடுக தட்டாரசந்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி கமலம் (75). கடந்த 7-ந் தேதி காலை வெளியே சென்ற மூதாட்டி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து மகன் போஸ் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
மதுரை தனியார் நிறுவன ஊழியர் காணவில்லை கரிமேடு போலீசார் விசாரணை
மதுரை தனியார் நிறுவன ஊழியர் காணவில்லை கரிமேடு போலீசார் விசாரணை மதுரை பெத்தானியபுரம் பாத்திமா நகரை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது34). வெள்ளரிப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி மனைவி, 1 ஆண் குழந்தை உள்ளனர். கடந்த 23-ந் தேதி தீபாவளியையொட்டி மாமனார் வீட்டிற்கு மனைவி, குழந்தைகளை அழைத்து சென்றார். அதன் பிறகு கடந்த 2-ந் தேதி முதல் அழகர்சாமியை காணவில்லை. அவரது செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் […]
தெப்பக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
தெப்பக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு திருமங்கலத்தை அடுத்துள்ள அலப்பலச்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜகோபால்-காளீஸ்வரி தம்பதியினர். இவர்கள் மானாமதுரை அருகில் உள்ள நாராயணதேவன் பட்டியில் குடியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஜய் என்ற காளி (11) அலப்பலச்சேரி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி நாகையாபுரம் நடுநிலை பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். அஜய் தனது நண்பர்களுடன் அலப்பலச்சேரி கிராமத்தில் உள்ள வாழவந்தஅம்மன் கோவில் தெப்பக்குளத்தில் […]
கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி கைது
கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி கைது மதுரை வில்லாபுரம் மீனாட்சிநகர் அண்ணாமலையார் வீதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா. இவரது மனைவி பாண்டியம்மாள் (43). இவர்களுக்கு கண்ணன் (27) என்ற மகன் உள்ளார். பாண்டியம்மாள் மேலஅனுப்பானடி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், அதே மில்லில் வேலை பார்த்த அனுப்பானடி பூம்புகார் நகரை சேர்ந்த செல்வம் (57) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. […]
அலங்காநல்லூர் அருகே வேட்டைக்கு சென்ற வாலிபர் மின்வேலியில் சிக்கி பலி
அலங்காநல்லூர் அருகே வேட்டைக்கு சென்ற வாலிபர் மின்வேலியில் சிக்கி பலி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.புதுப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 35). கூலி தொழிலாளியான இவர் வேட்டை நாய்களும் வளர்த்து வந்தார். அதனை வைத்து காட்டு பகுதிக்கு சென்று வேட்டையாடுவதிலும் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மாணிக்கம் தன்னுடைய 5 வேட்டை நாய்களை அழைத்து கொண்டு அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யன கவுண்டன்பட்டி கிராமத்தில் இருக்கும் காட்டு பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றுள்ளார். […]
பாப்பாரப்பட்டி அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய தொழிலாளிக்கு வலைவீச்சு
பாப்பாரப்பட்டி அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய தொழிலாளிக்கு வலைவீச்சு தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட அம்மன் நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 40). மாற்றுத்திறனாளி. இவருடைய மகள் பிளஸ்-1 படித்து வருகிறார். இதே கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (49). செங்கல் சூளை தொழிலாளி. வெங்கடாசலம், கோவிந்தராஜ் ஆகியோர் உறவினர் ஆவர்.இந்த நிலையில் கோவிந்தராஜ் தனது மைத்துனருக்கு 2-வது தாரமாக வெங்கடாசலத்தின் மகளை திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது.இதற்கு வெங்கடாசலத்தின் குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை என தெரிகிறது. […]
தஞ்சை கரந்தை பகுதியில் தீன் சிக்கன் கார்னர் கடையில் அப்பகுதியில் உள்ள நபர்கள் கடையை சூறையாடினார் அந்த சம்பவத்தை தொடர்ந்து,
தஞ்சாவூர் மாவட்டம்: தஞ்சை கரந்தை பகுதியில் தீன் சிக்கன் கார்னர் கடையில் அப்பகுதியில் உள்ள நபர்கள் கடையை சூறையாடினார் அந்த சம்பவத்தை தொடர்ந்து, தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திருமதி. ரவளி பிரியா I.P.S அவர்களின் உத்தரவின் பெயரில், தஞ்சை மேற்கு காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் மதிப்பிற்கு மரியாதைக்குரிய திருமதி. சந்திரா அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் கரந்தை பகுதியில் கடைகளை சூறையாடிய மூன்று நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தஞ்சை […]
கார் மீது வேன் மோதல்; அ.தி.மு.க. பிரமுகர் பலி
கார் மீது வேன் மோதல்; அ.தி.மு.க. பிரமுகர் பலி கார் மீது வேன் மோதியதில் அ.தி.மு.க. பிரமுகர் பலியானார்.மேலும் கொரியர் வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி வேடர்புளியங்குளம் வி.பி.சிந்தன் நகர் அ.தி.மு.க. கிளைச் செயலாளராக பணியாற்றி வந்தவர் முனியாண்டி (வயது56). இவரது மனைவி முத்துப்பிள்ளை. இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். முனியாண்டி தனக்கன்குளம் பகுதியில் இருந்து நான்கு வழிச்சாலையை கடந்து வேடர் புளியங்குளத்திற்கு காரில் […]
மதுரை திருமங்கலத்தில் போலி வங்கி கிளைக்கு சீல்
மதுரை திருமங்கலத்தில் போலி வங்கி கிளைக்கு சீல் தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தங்களது அனுமதியின்றி போலி கும்பல் சட்டவிரோதமாக கூட்டுறவு வங்கிகள் இயக்கி வருவதாக ரிசர்வ் வங்கி மாநில அரசுக்கு தகவல் அனுப்பியது. இதனை தொடர்ந்து சென்னை கிரைம்பிராஞ்ச் காவல் ஆணையா் சங்கர் ஜீவால் உத்தரவுபடி மாநிலம் முழுவதும் போலியாக இயங்கி வந்த வங்கி கிளைகளில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள மதுரை ரோட்டில் செயல் […]