மதுரை சித்திரை திருவிழா- ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி

மதுரை சித்திரை திருவிழா- ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் கடந்த 1-ந் தேதியும் தொடங்கியது.பாலத்தின் மேல் நின்றும், ஆற்றுக்குள் நின்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதியும், அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் கடந்த 1-ந் தேதியும் தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று அதிகாலை 5.51 மணியளவில் கள்ளழகர் வைகை […]

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ருகே மைத்துனரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ருகே மைத்துனரை கத்தியால் குத்திய வாலிபர் கைது விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிள்ளையார்கோவில் புரத்தை சேர்ந்தவர் வைர முத்து (வயது 38). இவரது மனைவி கவிதா. வைரமுத்துக்கு குடி பழக்கம் உள்ளது. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத் தன்று கோவில் திருவிழா வுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த கவிதாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த கவிதா அதே […]

விருதுநகர் மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை

விருதுநகர் மாவட்டத்தில் 3 பேர் தற்கொலை விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 50). இவர் தனது 2-வது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். அதற்காக செலவுக்கு அவரது தந்தை சேவுகன் மற்றும் தாய் வள்ளியம்மாளிடம் பணம் கேட்டு சென்றார். ஆனால் அவர்கள் தங்களிடம் பணம் இல்லை என கூறி விட்டனர். இதனால் முத்துப்பாண்டி மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுபோதையில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். […]

விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை போர்மேன் திடீர் சாவு

விருதுநகர் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை போர்மேன் திடீர் சாவு சாத்தூர் படந்தால் அருகே உள்ள முத்துராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 48), பட்டாசு ஆலை போர்மேன். இவருக்கு குடி பழக்கம் இருந்தது. அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் மனைவி கோபித்துக் கொண்டு ஒருவருடத்திற்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின்னர் தனியாக வசித்து வந்த காளிராஜிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் உறவினர்கள் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு […]

தர்மபுரியில்கொரோனாவுக்கு முதியவர் பலி

தர்மபுரியில்கொரோனாவுக்கு முதியவர் பலி தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தர்மபுரியை சேர்ந்த 78 வயது முதியவருக்கு சளி, காய்ச்சல், மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்பட்டது. இவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது.இதையடுத்து இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தர்மபுரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த […]

லாட்டரி சீட்டுகள் விற்ற 10 பேர் மீது வழக்கு

லாட்டரி சீட்டுகள் விற்ற 10 பேர் மீது வழக்கு தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் சில இடங்களில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவுப்படி பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அந்தந்த பகுதி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சில இடங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக 10 […]

கோவையில் முன் விரோதத்தில் 2 பேர் மீது தாக்குதல்-வாலிபர் கைது

கோவையில் முன் விரோதத்தில் 2 பேர் மீது தாக்குதல்-வாலிபர் கைது கோவை பேரூர் மெயின் ரோடு தனலட்சுமி நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (48). வியாபாரி. இவர் செல்வபுரம் எல்ஐசி காலனி சிஜிவி நகரில் ஜெப கூடம் நடத்தி வருகிறார். இந்தநிலையில், நேற்று 2 ஊழியர்கள் இவரது ஜெப கூடத்தில் ஜன்னலை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவர்களிடம் தகராறு செய்தார். மேலும் அங்கிருந்த லேப்டாப்பை அடித்து உடைத்து சேதப்படுத்தினார். […]

கோவையில் உருட்டுக்கட்டையால் அடித்து வாலிபர் கொலை

கோவையில் உருட்டுக்கட்டையால் அடித்து வாலிபர் கொலை கோவை குனியமுத்தூர் ரைஸ்மில் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது42) மனநலம் பாதிக்கப்பட்டவர். இன்று காலை 8 மணியளவில் அந்தப் பகுதியில் உள்ள குழிபைப் சந்து அருகே தலையில் மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் நாகராஜ் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது யாரோ ஒருவர் […]

கோவையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கோவையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கோவையில் உள்ள 3 வணிக வளாகங்களில் உள்ள தியேட்டர்களில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் ஒரு சில அமைப்புகள் படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனை முன்னிட்டு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி உள்ள 3 வணிக வளாகங்கள் முன்பு 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். […]

தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்காததால் போலீசில் புகார்

தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்காததால் போலீசில் புகார் மேட்டுப்பாளையம் – சிறுமுகை சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு கடந்த 2017-19, 2018- 2020,2019-2021ம் கல்வியாண்டில் இங்கு ஐடிஐயில் படித்த மாணவ, மாணவிகள் ஒவ்வொருவரிடமும் ரூ.5 முதல் ரூ.10 ஆயிரம் வரை கல்வி கட்டணத்தை விட கூடுதலாக பெற்றதாக கூறப்படுகிறது. மேலும், மாணவர்களின் கல்வியாண்டு முடிந்த பின்னரும் அவர்களுக்கான […]