பாண்டி விஷ சாராயம் கடத்திய இருவர் கைது மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு நான்குசக்கர வாகனம் பறிமுதல். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மது குற்றங்களை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்களின் உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மதுவிலக்கு காவல் சரகம் கொடைவலாகம் மதுகடிப்பட்டு அருகே அருகே மயிலாடுதுறை மதுவிலக்கு தனிப்படை பொலிஸார் வாகன சோதனை மேற்கொண்டபோது அவ்வழியே வந்த நான்குசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் தரங்கம்பாடி கோடங்குடியை சேர்ந்த மகாலிங்கம் […]
Day: February 26, 2020
சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சாலை விதி முறைகளை பற்றி விழிப்புணர்வு…!
சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் சாலை விதி முறைகளை பற்றி விழிப்புணர்வு…! சாலையில் தங்களுக்கு முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச்செல்லும்போது வலது புறமாக முந்திச்செல்ல வேண்டும். வாகனத்தை முந்துவதற்கு முன்பாக தங்களுக்கு பின்னால் வரும் வாகனத்திற்கு சுட்டிக்காட்டி (indicator) அதன் பின்னர் முந்திச்செல்ல வேண்டும். முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச்செல்லும்போது அந்த வாகனத்திற்கு முன்பு போதிய இடைவெளிவிட்டு செல்ல வேண்டும். வாகனத்தை முந்தும்போது ஒருபோதும் வேகத்தை அதிகரிக்கக்கூடாது. சாலையில் உள்ள அறிவிப்பு பலகைகளின் அறிவிப்புகளை ஒருபோதும் காணத்தவறக்கூடாது. சாலையில் […]
குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்த உதவி ஆய்வாளர்
குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட மாணவனை மீண்டும் பள்ளியில் சேர்த்த உதவி ஆய்வாளர். பெரம்பலூர் மாவட்டம் அரணாரை கிராமத்தைச் சேர்ந்த விக்ரம் என்பவரின் தந்தை இறந்துவிட்டதால் குடும்ப சூழ்நிலை காரணமாக பத்தாம் வகுப்பை இடையிலே விட்டு கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இதனை அறிந்த பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப்பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் மாணவனிடம் கல்வியின் சிறப்பினை எடுத்துக் கூறி அம்மாணவனை பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் […]
விஜய், அன்புச்செழியன் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத் துறையிடம் ஒப்படைப்பு
நடிகர் விஜய் நடித்திருந்த ‘பிகில்’ திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்நிலையில் நடிகர் விஜய், பிகில் திரைப்பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ் கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் சினிமா பைனான்சியர் மதுரை அன்பு என்கிற அன்புச்செழியன் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத ரூ.77 கோடி ரொக்கம், பல்வேறு சொத்து ஆவணங்கள் பறிமுதல்செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து 3 பேருக்கும் வருமானவரித் துறை சார்பில் […]
2 ஆண்டுகளாக துப்பு கிடைக்காமல் இருந்த தம்பதி கொலை வழக்கில் 2 இளைஞர்கள் கைது- ஒருவர் தன் சகோதரரை கொலை செய்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது
திருச்சி அருகே தம்பதி கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் தனது சகோதரரை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் மகன் ரமேஷ்(35). விவசாயியான இவர், ஊரிலிருந்து சற்று தொலைவில் வீடு கட்டி மனைவி லதாவுடன்(33) வசித்து வந்தார். கடந்த 23.4.2018-ம் தேதி இரவு ரமேஷூம், லதாவும் வீட்டின் வாசலில் படுத்திருந்தனர். நள்ளிரவில் அங்கு வந்த […]