கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஆட்டோவில் சென்றவர் தவறி விழுந்து சாவு கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் தினேஷ் (வயது 26) என்பவர் வேப்பூர் வந்து விட்டு மீண்டும் பெரியநெசலூர் செல்ல சேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பயணிகளை ஏற்றி கொண்டு வேப்பூர் சேலம் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது நயகரா பெட்ரோல் பங்க் அருகே ஆட்டோ டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த தினேஷ் ஆட்டோவிலிருந்து தவறி சாலையில் விழுந்து […]
Month: May 2023
திட்டக்குடி வெள்ளாற்றின் தடுப்பணை நீரை திறந்து விடும் மர்ம நபர்கள்: விவசாயிகள் வேதனை
திட்டக்குடி வெள்ளாற்றின் தடுப்பணை நீரை திறந்து விடும் மர்ம நபர்கள்: விவசாயிகள் வேதனை வெள்ளாற்றில் உள்ள தடுப்பணையில் தேக்கி வைத்திருந்த பாசன நீரை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திறந்து விட்டதால் வீணாக ஆற்றில் வெளியேறும் அவல நிலை உருவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கூடலூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே அரியலூர் மாவட்டத்தை இணை க்கும் தடுப்பணை வெள்ளாற்றில் ரூ.16 கோடியில் கட்ட ப்பட்டது. இந்த தடுப்பணை யால் 4.14 மில்லியன் கன அடி நீரைச் […]
குடும்ப தகராறில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை
குடும்ப தகராறில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பண்ருட்டி அருகே குடுமியான் குப்பத்தை சேர்ந்தவர் குமார் இவரது மனைவி உமா (வயது 45), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குமார் சரிவர வேலைக்கு செல்லாததால் கணவன், மனைவி இருவருக்குள் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் மன உலைச்சலில் இருந்த உமா நேற்று அதே பகுதியில் உள்ள சொந்த நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை […]
வேப்பூர் அருகே வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
வேப்பூர் அருகே வாட்டர் சர்வீஸ் ஸ்டேஷனில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த அடரி கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் இளவரசன் (வயது 25). இவர் பொயனப்பாடி கிராமம் செல்லும் சாலையில் சொந்தமாக வாட்டர் சர்வீஸ் நிலையம் வைத்துள்ளார். இங்கு வாட்டர் சர்வீஸ் செய்யும் பொழுது இளவரசன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் இளவரசன் மயங்கி கீழே விழுந்தார். இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். […]
கோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 7 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
கோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 7 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய கட்டுமானம் கட்டுவதற்கு அங்கிருந்த பல இன மரங்களை வெட்டும்பொழுது, அதில் இருந்த ஒரு சந்தன மரத்தையும் வெட்டி, அதன் அடித்துண்டை செதுக்கி, கடத்தி விட்டதாக பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சந்தன மரங்களை வெட்டி […]
ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்ததால் நிகழ்ந்த கொடூரம்: கல்லூரி மாணவி கொலையில் கர்ப்பிணி வாக்குமூலம்
ஒரே நேரத்தில் 2 பெண்களை காதலித்ததால் நிகழ்ந்த கொடூரம்: கல்லூரி மாணவி கொலையில் கர்ப்பிணி வாக்குமூலம் கோவை அருகே உள்ள இடையர் பாளையத்தை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் சுப்புலட்சுமி (வயது 20). கல்லூரி மாணவி. இவர் பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குத்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை நடந்த […]
மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு ஆனையூர் காமராஜர் நகரை சேர்ந்த பிரேம்குமார் மனைவி கமலலலிதா(56). நேற்று இவர் கள்ளழகர் சப்பரம் பார்ப்பதற்காக, கலைஞர் நகருக்கு வந்தார். மீனாட்சி குடியிருப்பு அருகே கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்த கமலலலிதாவிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள முத்துசாமிபட்டியை […]
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: ‘கோவிந்தா… கோவிந்தா…’ கோஷம் எழுப்பிய பக்தர்கள்
பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: ‘கோவிந்தா… கோவிந்தா…’ கோஷம் எழுப்பிய பக்தர்கள் இன்று பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.தல்லாகுளம் முதல் வைகை ஆறு வரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி காணப்பட்டது.உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதியும், அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் கடந்த 1-ந் தேதியும் தொடங்கியது. மீனாட்சி அம்மன் கோவிலில் 2-ந் தேதி திருக்கல்யாணமும், 3-ந் தேதி தேரோட்டமும் நடந்த […]
ரெயில் மோதி பலியான வாலிபர் யார்?
ரெயில் மோதி பலியான வாலிபர் யார்? மதுரை- கீழ் மதுரை ரெயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 3-ந் தேதி இரவு தண்டவாளத்தை கடக்க முயன்ற 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார்? என்ற ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. வலது பக்க வயிற்றில் கருப்பு மச்சமும், வலது கால் முட்டிக்கு கீழ் பழைய காயத்தழும்பும், கருப்பு மச்சமும் காணப்படுகிறது. இதுகுறித்து மதுரை கிழக்கு கிராம நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி […]
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்கள் போக்சோ சட்டத்தின்கீழ் கைது
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்கள் போக்சோ சட்டத்தின்கீழ் கைது திண்டுக்கல் அருகில் உள்ள சின்னாளபட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கேசவன் (வயது74). இவருக்கு 4 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இவர் அதே பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 7ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியை கடந்த 5 மாதமாக தனது அச்சகத்துக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த சிறுமியின் […]