Police Department News

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த வாலிபர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இளம்பெண்ணை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்த வாலிபர் கைது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் 20 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது வீட்டில் தனியாக இருந்தார். இதைப்பார்த்த சங்கரன்கோவில் கக்கன் நகரை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 21) என்பவர் அந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல் அதே மாதத்தில் 2-வது முறையாக அந்த பெண்னை […]

Police Department News

ரூ.23 லட்சம் கையாடல் செய்த 11 டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஓராண்டு சிறை

ரூ.23 லட்சம் கையாடல் செய்த 11 டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஓராண்டு சிறை சென்னை மதுரவாயல், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த 11 ஊழியர்கள், மது விற்பனையில் வசூலான ரூ.23 லட்சத்தை அரசுக்கு செலுத்தாமல் கையாடல் செய்ததாக 2010-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிபாண்டி, வெங்கடேசன், வினோத்குமார், சேகர், முருகன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த […]

Police Department News

மதுரைஊராட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ஆபாசமாக பேசியவர் மீது வழக்கு

மதுரைஊராட்சி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ஆபாசமாக பேசியவர் மீது வழக்கு மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் தோப்பூர் ஊராட்சி அலுவலகம் உள்ளது. சம்பவத்தன்று அந்த அலுவலகத்திற்கு அதேபகுதியைச் சேர்ந்த மணி மகன் கதிர்வேல் என்பவர் வந்தார். ஊராட்சித் தலைவரின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த அவர், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு ஊராட்சி தலைவரை ஆபாசமாக பேசி கேலி கிண்டல் செய்தாராம். மேலும் வெளியே வந்து தெருவில் உள்ள குழாயையும் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆஸ்டின்பட்டி […]

Police Department News

தென்காசிபாவூர்சத்திரத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை

தென்காசிபாவூர்சத்திரத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மேலப்பாவூர் போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் மாரி செல்வன். இவர் நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகள் சுருதி(வயது 17). இவர் பிளஸ்-1 ஆண்டு இறுதி தேர்வு எழுதி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் அதிகமாக செல்போன் பயன்படுத்தி வந்ததாகவும், அதனை அவரது தாயார் கண்டித்ததாகவும் […]

Police Department News

வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம்- 4 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள்

வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம்- 4 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் வால்பாறை அடுத்து சிறுகுன்றா எஸ்டேட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு தேயிலை தோட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில பெண்ணை சிறுத்தை தாக்கியது. இதை தொடர்ந்து அதே பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில வாலிபரையும் சிறுத்தை தாக்கியது. அடுத்தடுத்த நாட்களில் நடைபெற்ற சம்பவங்களால் தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். தங்களுக்கு உரிய பாதுகாப்பு […]

Police Department News

கோவை வனக்கோட்டத்தில் 6 வயது ஆண் யானையின் தந்தங்கள், எலும்புகள் கண்டெடுப்பு

கோவை வனக்கோட்டத்தில் 6 வயது ஆண் யானையின் தந்தங்கள், எலும்புகள் கண்டெடுப்பு கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனசரகத்திற்குட்பட்ட நரசீபுரம் பிரிவு, ரத்தப் பாறை வனப்பகுதியில் வனப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இறந்த ஆண் யானையின் மண்டையோடு, 2 தந்தங்கள் மற்றும் எலும்புகள் கிடந்தது. இதை பார்த்த வன ஊழியர்கள் சம்பவம் குறித்து வனத்துைற உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று காலை 10 மணியளவில் கோவை வனக்கோட்ட வன விரிவாக்க அலுவலர் […]

Police Department News

மகேந்திரமங்கலம் நீலகிரியான் கொட்டாய் கிராமத்தில் கல்தடுக்கி கீழே விழுந்ததில் 6 ம் வகுப்பு மாணவன் பலி.

மகேந்திரமங்கலம் நீலகிரியான் கொட்டாய் கிராமத்தில் கல்தடுக்கி கீழே விழுந்ததில் 6 ம் வகுப்பு மாணவன் பலி. தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் அடுத்த நீலகிரியான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த இராணுவ வீரர் ராமசாமி இவர் ஹைதராபாத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மகன் சதீஷ் (வயது.17) இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.இன்று காலை வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்ல பள்ளி வாகனத்தை நோக்கி வேகமாக ஓடி சென்றவர் சாலையில் கிடந்த […]

Police Department News

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். இந்த நிலையில் மனு கொடுக்க வந்த ஒரு பெண் கலெக்டர் அலுவலகம் முன்தனது உடலில் திடீரென மண்எண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர் அவரை […]

Police Department News

சித்திரை திருவிழா: பக்தர்கள் பாதுகாப்புடன் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-அமைச்சர்கள்

சித்திரை திருவிழா: பக்தர்கள் பாதுகாப்புடன் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-அமைச்சர்கள் மதுரை சித்திரை பெருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோ சனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர்கள் பி.மூர்த்தி , பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடந்தது. கலெக்டர் அனீஷ் சேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் பேசும்போது கூறியதாவது:- மதுரை மாவட்டத்தின் அடை யாளங்களில் ஒன்றான சித்திரை பெரு விழா மதுரை மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவிலில் நேற்று கொடி […]

Police Department News

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 4 வாலிபர்கள் கைது

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 4 வாலிபர்கள் கைது மதுரை தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சொக்கிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வல்லபாய் மெயின் ரோட்டில் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் செய்து அதனை வீடியோ வாக பதிவு செய்து கொண்டி ருந்தனர். அவர்கள் பொது இடத்தில் சாகசம் செய்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனை கண்ட போலீசார் அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். […]