Police Department News

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை

கோவையில் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை பொள்ளாச்சி அருகே உள்ள கருமாபுரம் புதூரை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி சோபனா (வயது 33). தனியார் பள்ளி ஆசிரியை இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தை உள்ளது. சோனாவுக்கு அவரது கணவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சோபனா […]

Police Department News

திருச்சியில் ஆற்றுப்பாலத்தின் கீழ் இளைஞர் சடலம் மீட்பு

திருச்சியில் ஆற்றுப்பாலத்தின் கீழ் இளைஞர் சடலம் மீட்பு திருச்சி மாவட்டம் துறையூர் கொத்தம்பட்டி குண்டாற்று பாலம் அருகே உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியினர் துறையூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த நபருக்கு 40 வயது இருக்கலாம் என கூறப்படுகிறது. முகம் முழுவதும் சிதைந்த நிலையில் […]

Police Department News

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் 7 பேருக்கு கத்தி குத்து, 15 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் அட்டகாசம் தொடர்ந்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை.

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் 7 பேருக்கு கத்தி குத்து, 15 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் அட்டகாசம் தொடர்ந்து போலீசாரின் அதிரடி நடவடிக்கை. சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறகுவதை காண பல் வேறு இடங்களிலிருந்தும் வந்தவர்கள் கோரிப்பாளையம் தல்லாகுளம் தமுக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கூடியிருந்தனர் இந்த கூட்டத்தை பயன்படுத்தி 15 பேர் கொண்ட வழிப்பறி கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் அங்கு புகுந்தது அந்த கும்பல் பக்தர்கள் பொதுமக்களிடம் இருந்து செல்போன் உள்ளிட்டவைகளை […]

Police Department News

வாசுதேவநல்லூரில் மதுபாட்டிலால் நண்பரை குத்திய வாலிபர்

வாசுதேவநல்லூரில் மதுபாட்டிலால் நண்பரை குத்திய வாலிபர் வாசுதேவநல்லூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 42). இவரும், கோட்டையூர் பசும்பொன் 2-வது தெருவை சேர்ந்த சண்முக ராஜ் (36) என்ப வரும் நண்பர்கள். இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் இருவரும் வாசுதேவநல்லூர் காமராஜ் சிலை பின்புறம் மது குடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜ் மதுபாட்டிலை உடைத்து மாரிச்சாமியை குத்தினார். இதில் மாரிச்சாமிக்கு பலத்த காயம் […]

Police Department News

தென்காசி மாவட்டத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள்

தென்காசி மாவட்டத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தடை செய்ய வேண்டும், திரையிடக்கூடாது என்று கூறி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் அச்சடிக்கப்பட்டுள்ள அந்த போஸ்டர்கள் கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை புளியங்குடி, சங்கரன்கோவில், பொட்டல்புதூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக ஒட்டப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த படத்தை திரையிட கடும் […]

Police Department News

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக தாய் உள்பட 3 பேர் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக தாய் உள்பட 3 பேர் கைது தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது சாவில் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், மாணவியின் தாயாரை அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார். […]

Police Department News

சுரண்டையில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி

சுரண்டையில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பலி தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இரட்டைகுளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது மகன் மகேந்திரன்(வயது 17) பார்வை திறன் குறைபாடு உடையவர். அவர் 8-ம் வகுப்பு முடித்துவிட்டு கிளி, புறா உள்ளிட்டவற்றை வளர்த்து வந்துள்ளார். மேலும் கிணறு, மரங்களில் இருக்கும் புறா உள்ளிட்டவற்றை எடுத்து வீட்டில் வைத்து வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வீட்டை விட்டு […]

Police Department News

வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் நினைவிடத்தில் மரியாதை

வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் நினைவிடத்தில் மரியாதை கடந்த 2020-ம் ஆண்டு மே 4-ந்தேதி ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 ராணுவவீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் சந்திரசேகரும் ஒருவர். இந்நிலையில் வீர மரணமடைந்த சந்திரசேகரின் 3-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியில் உள்ள […]

Police Department News

தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தென்காசி மாவட்ட இளைஞர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு கல்லூரி படிப்பை முடித்து அல்லது இறுதி ஆண்டு பயிலும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த இளைஞர்களுக்கு “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் மத்திய அரசு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வாயிலாக நடைபெற இருக்கிறது. இப்பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு கீழ்காணும் லிங்க் மூலம் https://bit.ly/3ND1U95 தங்கள் சுய விவரங்களை உள்ளீடு […]

Police Department News

பண்ருட்டி – கடலூர் சாலையை விபத்து இல்லாத சாலையாக மாற்ற போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு

பண்ருட்டி – கடலூர் சாலையை விபத்து இல்லாத சாலையாக மாற்ற போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு பழைய திருட்டு, கொள்ளை, கொலை வழக்குகளை தூசிதட்டி எடுத்து துப்புத்துலக்கி கொலை, கொள்ளைகாரர்களை அதிரடியாக கைது செய்து பொதுமக்களின் பாராட்டையும், நன்மதிப்பினையும் பெற்றுள்ளார். இவரது பல்வேறு அதிரடி களுக்கு நடவடிக்கைகளில் ஒன்றாக, சாலைகளில் தினமும் நடைபெற்று வரும் விபத்துகளை குறைப்பதிலும் அதிக ஆர்வம் […]