தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே காதலிப்பதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துமாலைபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அஜித்குமார்(வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மதிக்கத்தக்க மாணவி ஒருவரை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அஜித் குறித்து பாவூர்சத்திரம் போலீசில் […]
Month: June 2023
தேவிபட்டணம் கிராமத்தை போதையற்ற கிராமமாக மாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம்
தேவிபட்டணம் கிராமத்தை போதையற்ற கிராமமாக மாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் தேவிபட்டணம் கிராமத்தை போதையற்ற கிராமமாக மாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தேவிபட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாடசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராஜ், ஒன்றிய கவுன்சிலர் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சிவகிரி இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணகுமார் ஆகியோர் […]
10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை மதுரை அச்சம்பத்து பாக்கியலட்சுமி நகரை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் அனுப்பானடியில் உள்ள சில்வர் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ஹரிகரன்(வயது14). இவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில வாரங்களாக பள்ளி முடிந்ததும் ஹரிகரன் வீட்டிற்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் ஹரிகரன் மனவேதனை அடைந்தார். இந்த நிலையில் நேற்று அவரது […]
ஆவின் நிறுவன பெண் அதிகாரி வீட்டில் 32 பவுன் நகை-பணம் கொள்ளை
ஆவின் நிறுவன பெண் அதிகாரி வீட்டில் 32 பவுன் நகை-பணம் கொள்ளை மதுரை அண்ணாநகர் மெயின் ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், ராணுவ வீரர். இவரது மனைவி கல்பனா. இவர் மதுரை ஆவின் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவர் ராணுவத்திலும், மகன் வெளியூரிலும் வேலை பார்த்து வந்ததால் கல்பனா மட்டும் மதுரையில் தனியாக வசித்து வந்தார். சம்பவத்தன்று காலை கல்பனா வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் வேலைக்கு […]
ஒர்க்க்ஷாப் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி
ஒர்க்க்ஷாப் உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் 2-வது தெரு தென்றல் நகரை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது55). இவர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். மதுரை நரிமேடு பி.டி.ராஜன் ரோட்டை சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (55). இவரது மனைவி மீனா (50). இவர்கள் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்த தொழிலில் பங்குதாரராக சேர்ந்தால் அதிக லாபம் கிடைக்கும் என முத்துக் குமரனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய முத்துக்குமரன் பல தவணைகளில் […]
பூ வியாபாரிகள் மோதல்; 4 பேர் கைது
பூ வியாபாரிகள் மோதல்; 4 பேர் கைது திருப்பரங்குன்றம் கீழத்தெருவை சேர்ந்த பழனிவேல் மனைவி புஷ்பவல்லி (வயது28). இவர் கோவில் முன்பு பூ வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மகன் மதன் (30). இவரும் கோவில் முன்பு பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்குள் வியாபாரம் செய்வது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று அவர்க ளிடையே வியாபாரம் செய்வதில் ஏற்பட்ட போட்டியில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு […]
காரைக்குடியில் பயங்கரம்.. ஜாமீனில் வந்த வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை
காரைக்குடியில் பயங்கரம்.. ஜாமீனில் வந்த வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரை சேர்ந்தவர் அறிவழகன் என்ற வினித் (வயது27). இவர் காரைக்குடியில் நடந்த ஒரு கொலை உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். நிபந்தனை ஜாமீனில் வெளியே இருந்த அவர் காரைக்குடியில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக தெற்கு போலீஸ் நிலையத்தில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் கையெழுத்திட்டு வந்தார். இதற்காக புது பஸ் நிலையம் அருகே உள்ள […]
சிவகங்கையில் எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
சிவகங்கையில் எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் புதிதாக கொடுக்கப்பட்ட 32 மனுக்களுக்கும், மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதல்வரின் முகவரி, மாவட்ட ஆட்சித் தலைவரின் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெறப்பட்ட மனுக்கள் என நிலுவையில் இருந்த 7 மனுக்கள் என மொத்தம் 39 மனுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட […]
மகளுடன் இளம்பெண் மாயம்
மகளுடன் இளம்பெண் மாயம் சிவகங்கை அருகே உள்ள எம்.வேலன்குளத்தை சேர்ந்தவர் சவுந்தர்யா. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனது 3 வயது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக சவுந்தர்யா சிவகங்கையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார். சம்பவத்தன்று மகளை அழைத்துக்கொண்டு வேலைக்கு செல்வதாக கூறி சென்ற சவுந்தர்யா அதன் பின் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் லதா கொடுத்த புகாரின்பேரில் தாலுகார் […]
மார்க்கெட் ஏலம் எடுக்கும் தகராறில் மதுரை வாலிபரை கொன்ற கும்பல
மார்க்கெட் ஏலம் எடுக்கும் தகராறில் மதுரை வாலிபரை கொன்ற கும்பல மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் ஞானசேகர். இவரது மகன் அறிவழகன் என்ற வினித் (வயது 29). இவர் மீது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. குற்ற வழக்குகள் தொடர்பாக அறிவழகன் காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் தினமும் கையெ ழுத்திட்டு வந்தார். இதற்காக அவர் தனது ஆதரவாளர்களுடன் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தின் […]