புத்தாண்டு தினத்தை ஒட்டி மதுரை மாவட்டத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மதுரை மாவட்ட காவல் துறை அறிவிப்பு….. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்யப்படுவர் என்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை தடுக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், புத்தாண்டு அன்று மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதன்படி, மதுரை மாவட்டத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் பொது இடங்களில் […]
Month: December 2021
ராஜஸ்தான் சென்று குற்றவாளிளை கைது செய்த தனிபடை போலீசார்
ராஜஸ்தான் சென்று குற்றவாளிளை கைது செய்த தனிபடை போலீசார் மதுரை கீழ ஆவணி மூல வீதி குன்னத்தூர் சத்திரம் அடுத்துள்ள கட்டிடத்தின் மாடியில் அழகு சாதன பொருட்கள் மொத்தக்கடை வைத்திருப்பவர் அனில்குமார் கடந்த டிசம்பர் மாதம் 13 ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு சென்றார் மறுநாள் வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு வசூல் தொகை 8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது இது தொடர்பாக. கடை ஊழியர் மங்குசிங் வயது 31/2021, அவரது நண்பர் ராகேஷ்நாத் […]
மதுரையில் மருந்து கடைகளில் போலீசார் சோதனை
மதுரையில் மருந்து கடைகளில் போலீசார் சோதனை மதுரையில் பள்ளிகள் கல்லூரிகள் அருகில் உள்ள மருந்துக்கடைகளில் போதை தரக்கூடிய மருந்துகள் விற்க்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுகின்றன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து கடந்த 28 ம் தேதி கல்லூரி மற்றும் பள்ளி அருகில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் அடிமை பழக்கத்தை உருவாக்க கூடிய மருந்துகள் விற்பனை செய்வதை தடுக்க போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் உத்தவிட்டனர் அதன் பேரில் 28.12.2021 […]
புத்தாண்டு கொண்டாட்டம் : “பூங்கா, கடற்கரை பகுதிகளில் அனுமதி இல்லை, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை” – எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை
: புத்தாண்டு கொண்டாட்டம் : “பூங்கா, கடற்கரை பகுதிகளில் அனுமதி இல்லை, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை” – எஸ்பி ஜெயக்குமார் எச்சரிக்கை தூத்துக்குடி மாவட்டத்தில் வருகின்ற 2022 புத்தாண்டு தினத்தை பூங்கா, கடற்கரை பகுதிகளில் கொண்டாட அனுமதி இல்லை எனவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.தற்போது பரவி வரும் உருமாறிய […]
போக்கு வரத்து மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
போக்கு வரத்து மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை மற்றும் சேர்மத்தாய் வாசன் மகளிர் கலைக்கல்லூரி NSS ஆசிரியைகள், NSS மாணவிகள் 50 பேர் இணைந்து மதுரை ST MARY’S சந்திப்பு அருகில்… போக்குவரத்து மற்றும் கொரோனா விழிப்புணர்வு சைகை கட்சிகள் மற்றும் துண்டு பிரசுரம் கொடுத்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கி… மேலும் NSS மாணவிகள் போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக உறுதி மொழியினை தெப்பக்குளம் போக்குவரத்து ஆய்வாளர் அ. தங்கமணி அவர்கள் முன்னிலையில் […]
மதுரையில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் வட்டா போக்கு வரத்து அலுவலர்கள் ஆய்வு
மதுரையில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் வட்டா போக்கு வரத்து அலுவலர்கள் ஆய்வு மதுரை எம்.ஜி.அர் பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகனங்களில் ஆய்வு நடந்தது விதிகளை மீறி 42 அரசு. தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த மல்டி ஏர் ஹாரன் களை அகற்றினர் போக்குவரத்து உதவி ஆணையர் மாரியப்பன் ஆர்.டி.ஒ. செல்வம் மோட்டார் ஆய்வாளர்காள் உலகநாதன் முரளி ஆகியோர் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டம்:-அருப்புக்கோட்டையில் கலாம் மாணவர்கள் இயக்கம் சார்பில் வாகனங்களில் முகப்பு விளக்குகளில் ஒளியை கட்டுப்படுத்த கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம்:–அருப்புக்கோட்டையில் கலாம் மாணவர்கள் இயக்கம் சார்பில்வாகனங்களில் முகப்பு விளக்குகளில் ஒளியை கட்டுப்படுத்த கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது அருப்புக்கோட்டை புறநகர் பேருந்து பகுதியான காந்தி நகரில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அருப்புக்கோட்டை மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் திரு. கண்ணன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேருந்துகள், லாரிகள்,கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் […]
மதுரை மாநகர் ஊர் காவல் படையில் புதிய சரக உதவி துணை தலைவர் அறிமுக விழா
மதுரை மாநகர் ஊர் காவல் படையில் புதிய சரக உதவி துணை தலைவர் அறிமுக விழா மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவல் ஆணையாளர் திரு.பிரேம் ஆனந்த் சின்கா அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகர ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மாதாந்திர கவாத்து நடைபெற்றது. முன்னாள் சரக உதவி துணை தலைவர் திரு. கார்மேகம் மணி அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். (பணி ஓய்வு ) இவருக்கு பதிலாக திரு. ராம்குமார் சரக உதவி துணை தலைவராக […]
80 லட்சம் கடன் திருச்சி ஆம்னி பேருந்து உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை
80 லட்சம் கடன் திருச்சி ஆம்னி பேருந்து உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை திருச்சி கருமண்டபம் பகுதி ஆல்பா நகரில் வசித்து வந்தவர் சங்கர் (58). இவர் சொந்தமாக 5 ஆம்னி பேருந்துகள் வைத்து தொழில் நடத்தி வந்தார். இவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் வெளியூரில் வசித்து வந்தர். இந்நிலையில் நீண்ட நாட்களாக சங்கர் 80 லட்சம் கடன் பிரச்சனையால் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சங்கர் நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]
மதுரை மாவட்டம் மேலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. அவர்கள் ஆய்வு
மதுரை மாவட்டம் மேலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. அவர்கள் ஆய்வு மதுரை மாவட்டம் மேலூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பார் திரு பாஸ்கர் அவர்கள் ஆய்வு செய்தார். வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்தவர் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத வழக்குகள் மீது விரைந்து நவடிக்கை எடுக்க அறிவுறித்தினார் டி.எஸ்.பி. ராதா கிருஷ்னன் (பொறுப்பு) , ஆய்வாளர் திரு சார்ளஸ், ரமாராணி பத்மநாபன்,கருப்பசாமி, தனிப்பிரிவு எஸ் ஐ கள் பிச்சை, முத்துகுமார் உள்ளிட்டடோரிடம் ஆலோசனை நடத்தினார்