Police Department News

என்.ஐ.ஏ.,வில் புகார் அளித்த வழக்கறிஞரிடம் விசாரணை

என்.ஐ.ஏ.,வில் புகார் அளித்த வழக்கறிஞரிடம் விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அமைப்பிடம் புகார் அளித்த மதுரை வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் கீரைத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். பி.எப்.ஐ., உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாகவும், அவற்றை தடை செய்ய வேண்டும் எனவும் என்.ஐ.ஏ.,விற்கு புகார் அளித்ததன் பேரில் இவரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழக கவர்னர், டி.ஜி.பி., மதுரை கலெக்டருக்கு இவர் மீண்டும் அனுப்பிய மனுவில், ‘ஹிந்து அமைப்புகளை சேர்ந்த சிலரை குறிவைத்து […]

Police Department News

தேவா் ஜெயந்தி விழா: போலீஸ் அதிகாரிகளுடன் கூடுதல் டிஜிபி ஆலோசனை

தேவா் ஜெயந்தி விழா: போலீஸ் அதிகாரிகளுடன் கூடுதல் டிஜிபி ஆலோசனை மருதுபாண்டியா் குருபூஜை, தேவா் ஜெயந்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரையில் காவல்துறை உயா் அலுவலா்களுடன், கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோயிலில் சுதந்திர போராட்ட வீரா்கள் மருதுபாண்டியா்கள் குருபூஜை அக். 27- இல் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில் அக். 29, 30- ஆம் தேதிகளில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா, குருபூஜை நடைபெறுகிறது. […]

Police Department News

காவல் நிலையங்களில் புகார்தாரர்களுக்கு ராஜமரியாதை தினமும் மக்களிடம் போலீஸ் கமிஷனர் கருத்து கேட்பு

காவல் நிலையங்களில் புகார்தாரர்களுக்கு ராஜமரியாதை தினமும் மக்களிடம் போலீஸ் கமிஷனர் கருத்து கேட்பு தமிழகத்தில் முதன்முறையாக கடந்த அக்டோபர் மாதம் 10 ம் தேதி மக்கள் குறைகளை விரைவாக தீர்க்கவும் காவல் நிலையத்தில் காத்திருப்பை தவிர்க்கவும் கிரேட் சிஸ்டத்தை காவல் ஆணையர் திரு. செந்தில்குமார் அவர்கள் அறிமுகப்படுத்தினார். காவல் நிலையத்தில் வரவேற்பாளரிடம் மனு கொடுக்கும் போது அதை கணினியில் பதிவு செய்தவுடன் சர்வர் மூலம் அதை காவல் ஆணையர் அலுவலகத்தில் அறியலாம். புகார் கொடுத்த மறு நாள் […]

Police Department News

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு படி

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மாதம் ரூ.300 சிறப்பு படி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு சிறப்பு படியாக மாதம் ரூ.300 வழங்க 42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களுக்கு காவலர் முதல் ஆய்வாளர்கள் வரை சிறப்பு படியாக மாதம் 300 ரூபாய் வழங்க்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சட்டம் ஒழுங்கு போலீசார் குற்றத்தடுப்பு போலீசார் இரவு ரோந்து பணிக்கு செல்கின்றனர் இது தவிர […]

Police Department News

மேலூர் அருகே கணவன்-மனைவி சரமாரி வெட்டிக்கொலை: வாலிபர்கள் வெறிச்செயல்

மேலூர் அருகே கணவன்-மனைவி சரமாரி வெட்டிக்கொலை: வாலிபர்கள் வெறிச்செயல் வீடு புகுந்து கணவன்-மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு வந்தார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அட்டப்பட்டி பக்கமுள்ள ஆண்டிகோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி கருப்பசாமி (வயது41). இவரது மனைவி செல்வி (41). இவர்களுக்கு அஜித்குமார் (20) என்ற மகன் உள்ளார். கணவன்-மனைவி இருவரும் தங்கள் […]

Police Department News

என்ஜினீயரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆசிரியை- காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு

என்ஜினீயரின் திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆசிரியை- காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு சின்னசாமிக்கு அவரது பெற்றோர், விருதுநகரை சேர்ந்த மற்றொரு பெண்ணிற்கும் திருமணம் நிச்சயம் செய்தனர்.திருமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ டிரைவர். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் நாகபிரியா(வயது 30). இவர் பி.சி.ஏ. படித்துவிட்டு தனியார் […]

Police Department News

மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளை

மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளை திருமங்கலம் அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.அவர்கள் தங்களை உறவினர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி‌ கல்லுப்பட்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ருக்மணி வயது (70). இவர்களது மகன், மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது. இதன் காரணமாக ரவி- ருக்குமணி தம்பதி தனியாக வசித்து வந்தனர். […]

Police Department News

முன் விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

முன் விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு முன் விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர். மதுரை திருப்பாலை, ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் செந்தில்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதுரை வந்தார். நேற்று காலை அவர் தனது குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பி கொண்டு இருந்தார். […]

Police Department News

மதுரையில் விதிமுறைகளை மீறியதாக 350 வாகனங்கள் மீது வழக்கு- போலீசார் நடவடிக்கை

மதுரையில் விதிமுறைகளை மீறியதாக 350 வாகனங்கள் மீது வழக்கு- போலீசார் நடவடிக்கை மதுரையில் 300 வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தெரிய வந்தது.வாகனங்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருது பாண்டியர் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜைக்கு வரும் வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தனர். அதனை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

Police Department News

போக்குவரத்து புதிய விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எஸ் ஐ சென்றாயன் மற்றும் துரை எஸ் ஐ தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தப்பட்டது

போக்குவரத்து புதிய விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எஸ் ஐ சென்றாயன் மற்றும் துரை எஸ் ஐ தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தப்பட்டது தர்மபுரி மாவட்டம் பென்னாகர வட்டத்திற்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே புதிய மோட்டார் விதிமுறைகளை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் பென்னாகரம் எஸ்ஐ துரை மற்றும் எஸ் ஐ சென்ராயன் உள்ளிட்டோர் பங்கேற்றன இதனை படத்தில் காணலாம்…. போலீஸ் யூனியர் செய்திகளுக்காகடாக்டர். மு .ரஞ்சித் குமார்செய்தியாளர் வெற்றி மற்றும் சங்கீதா […]