Police Department News

வாகனம் மோதி கட்டிட மேஸ்திரி சாவு

வாகனம் மோதி கட்டிட மேஸ்திரி சாவு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 57). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக காரிமங்கலம் வந்தார். மொரப்பூர் மேம்பாலம் சர்வீஸ் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் மாதேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்த […]

Police Department News

பாலக்கோடு அரகே இளம்பெண்ணை கடத்தியதாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

பாலக்கோடு அரகே இளம்பெண்ணை கடத்தியதாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள நல்லூர் பகுதியை சேர்ந்த மாதேஷ். இவருடைய மனைவி சரிதா (வயது 20). இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணமானது. உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக 7 பவுன் தங்க நகையுடன் சென்ற சரிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மாமியார் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். […]

Police Department News

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? ரேஷன் கடைகளில் வழங்குவதற்கான காரணம் என்ன?

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? ரேஷன் கடைகளில் வழங்குவதற்கான காரணம் என்ன? நியாய விலைக் கடைகளில் அரிசியுடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்து வழங்கப்படவுள்ள நிலையில், செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன என்பதை விரிவாக பார்ப்போம். பொதுமக்களின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்கும் வகையில் உணவின் தரத்தை மேம்படுத்த, அத்தியாவசிய சத்துக்களுடன் அரிசியை செறிவூட்டுவதே செறிவூட்டப்பட்ட அரிசியாகும். வழக்கமான அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது இரும்புச்சத்து, வைட்டமின், ஃபோலிக் அமிலம் போன்ற […]

Police Department News

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் 80 சதவீதம் குறைந்துள்ளது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு தென்காசியில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:- தென்காசி, கன்னியாகுமரி, தேனி, கோவை ஆகிய கேரள மாநில எல்லைகள் இருக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். கூடுதலாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு அவசியம் கருதி மேலும் கூடுதல் பாதுகாப்பு தேவை என்று கருதினால் உடனடியாக போலீசார் அனுப்பிவைக்கப்படுவார்கள். போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்பதுதான் முதல்-அமைச்சரின் திட்டம். அந்த […]

Police Department News

கிணற்றில் பிணமாக மிதந்த மூதாட்டி

கிணற்றில் பிணமாக மிதந்த மூதாட்டி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, தாதம்பட்டி நகர்ப்புற சாலையில் பக்கத்தில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரங்கள் தெரியவில்லை. இது […]

Police Department News

அபராதம் கட்டுறீங்களா..?நீதித்துறையில் உள்ள சிறப்பு அம்சம்!

அபராதம் கட்டுறீங்களா..?நீதித்துறையில் உள்ள சிறப்பு அம்சம்! குடிமக்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் அதற்கு இறுதியான தீர்வு சட்ட தீர்வுதான் என்பதால், அதை சட்ட பூர்வமான முறையில் தீர்த்து வைப்பதற்கு என உருவாக்கப்பட்ட துறைதான் நீதித்துறை. மேலும் சட்டபடி ஒருவர் செய்த குற்றத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கும் சிறப்பான அதிகாரத்தை பெற்றுள்ள துறையும் நீதித்துறை தான். அதாவது “நிர்வாகத்துறையால் குற்றம் மட்டுமேதான் சாற்ற இயலும்”. அந்த குற்றச்சாட்டு உண்மையா அல்லது பொய்யா என்பதை விசாரித்து குற்றம் உண்மை எனில் […]

Police Department News

அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகம் திரும்பி வர தொடங்கிய வடமாநில தொழிலாளர்கள்

அரசு எடுத்த நடவடிக்கையால் தமிழகம் திரும்பி வர தொடங்கிய வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய நகரங்கள், கிராமங்கள் என எல்லா பகுதிகளிலுமே வடமாநிலத்தவர்கள் அதிகமாக வேலை பார்த்து வருகின்றனர். குறிப்பாக பீகார், ஜார்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் தமிழகம் முழுவதும் தங்கள் குடும்பத்தினருடன் தங்கி பணியாற்றி வருகிறார்கள். கட்டிட வேலை, மோட்டார் பம்ப் உற்பத்தி, நூற்பாலைகள், ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள், கயிறு ஆலைகள், கோழிப்பண்ணை கொசுவலை உற்பத்தி, பஸ் […]

Police Department News

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய டிஜிபி அவர்கள்.

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய டிஜிபி அவர்கள். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் செ. சைலேந்திரபாபு. இ.கா.ப., அவர்கள் 18.03.2023-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை புரிந்த குடியரசு தலைவர் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு முடித்தார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மணிமுத்தாறு சிறப்பு காவல் படைக்கு சென்று கொண்டிருந்தபோது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலைய பதிவேடுகள் மற்றும் […]

Police Department News

மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின கருத்தரங்கம் இன்று நடைப்பெற்றது.

மாரண்டஅள்ளி தனியார் மண்டபத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தின கருத்தரங்கம் இன்று நடைப்பெற்றது. தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் உள்ள தனியார் மண்டபத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அதன் இயக்குநர் சந்திரகலா தலைமையில் உலக மகளிர் தின கருத்தரங்கம் மற்றும் பேரணி நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது.இதற்கு தர்மபுரி சுகாதார இணை இயக்குநர் டாக்டர்.சாந்தி, தர்மபுரி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிகுமார், இந்தியன் வங்கி மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த் […]

Police Department News

சின்னாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் டிரைவர் கைது .

சின்னாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் டிரைவர் கைது . தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சின்னாற்றில் மணல் கடத்துவதாக மாரண்டஅள்ளி காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது,தகவலின் பேரில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், இன்று காலை சக்கிலிநத்தம் பகுதியில் வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் 1 யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது, விசாரனையில் சக்கிலிநத்தம் அருகே உள்ள சின்னாற்று படுகையில் இருந்து கள்ளத்தனமாக மணல் திருடி வந்தது தெரிய வந்தது. உடனடியாக டிராக்டரை […]