Police Department News

மொழி தெரியாத வெளிமாநிலத்தில் வேலை செய்கிறீர்களா..?

மொழி தெரியாத வெளிமாநிலத்தில் வேலை செய்கிறீர்களா..? தாய்மொழியில், தமிழ் மொழியில் மனுத்தாக்கல் சாத்தியமா..? இந்தியாவில் பணியாற்றும் எந்த ஒரு மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களிடமும் நீதிபதிகளிடமும் இந்திய சாசன கோட்பாடு 350ன் படி உங்களின் தாய் மொழியிலேயே மனு கொடுக்க உரிமை உண்டு.தேவைப்பட்டால் அம்மனுவை பெறுபவர் அவரது தாய் மொழிக்கு மொழியாக்கம் செய்து விசாரணை நடத்தியதில் உத்தரவு பிறப்பித்து அதனை உங்களின் தாய் மொழிக்கு மொழியாக்கம் செய்து கொடுக்க கடமைப்பட்டவராவார். இப்படி ஒரு கோட்பாடு இருப்பது […]

Police Department News

செங்கோட்டையில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை

செங்கோட்டையில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை செங்கோட்டையை அடுத்த காலங்கரையில் உள்ள கண்ணன் காம்பவுண்டு பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மனைவி விக்னேஷ்வரி(வயது 26). இவர்கள் 2 பேரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நேற்று பண்பொழியில் உள்ள திருமலை கோவிலுக்கு செல்வதற்காக மணிகண்டன் தனது மனைவியை அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வெறுப்படைந்த விக்னேஷ்வரி வீட்டில் இருந்த […]

Police Department News

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் கைது கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேடசந்தூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர். இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- நான் எங்கள் பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறேன். எனக்கு திருமணமாகி 14, 9 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது மகள்கள் எங்கள் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று எனது […]

Police Department News

கோவை மத்திய ஜெயிலில் செல்போன்களை பதுக்கி வைத்துஇருந்த கைதிகள் மீது வழக்குப்பதிவு

கோவை மத்திய ஜெயிலில் செல்போன்களை பதுக்கி வைத்துஇருந்த கைதிகள் மீது வழக்குப்பதிவு கோவை மத்திய ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். ஜெயிலுக்குள் கைதிகள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை மீறி சில கைதிகள் செல்போன்களை பதுக்கி வைத்து பயன்படுத்துவதாக ஜெயில் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கோவை மத்திய ஜெயில் ஜெயிலர் சிவராஜன் தலைமையிலான போலீசார் ஜெயில் முழுவதும் சோதனை […]

Police Department News

உங்களுக்கு தெரியுமா..?விபத்தில் மரணம் அடைந்தால் வக்கீலை வைத்து வழக்கு நடத்தி நிவாரணம் பெறுகின்றோம். அதற்கான வழக்கறிஞர் கட்டணம் எவ்வளவு

உங்களுக்கு தெரியுமா..?விபத்தில் மரணம் அடைந்தால் வக்கீலை வைத்து வழக்கு நடத்தி நிவாரணம் பெறுகின்றோம். அதற்கான வழக்கறிஞர் கட்டணம் எவ்வளவு நம் குடும்ப உறுப்பினர்கள் உயிரைக்கொடுத்ததால் வரும் நிவாரணத் தொகையில் வழக்கறிஞர்கள் 15% முதல் 50% வரை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், உண்மையாக அவர்களுக்கு அவ்வளவு தொகை கொடுக்க வேண்டியதில்லை. நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள். உண்மையில் தீர்ப்பு எழுதும் பொழுது தீர்ப்பில் வழக்கறிஞருக்கு உண்டான செலவுத்தொகை என்று அதில் குறிப்பிடப்படும் தொகையே கொடுக்கப்பட வேண்டும். நீதிபதிகள் சில நேரங்களில் இதை குறிப்பிடுவதில்லை. […]

Police Department News

அதிக கனிம வளங்கள் ஏற்றி வந்த 8 லாரிகளுக்கு அபராதம்

அதிக கனிம வளங்கள் ஏற்றி வந்த 8 லாரிகளுக்கு அபராதம் தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. நாகசங்கர் அவர்களின் தலைமையில் பல்வேறு பகுதிகளில் போலீசார் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களில் அதிக பாரங்கள் ஏற்றி செல்வதை கண்டறிந்து உடனடி அபராதம் விதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செங்கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளவரசி அவர்களின் தலைமையில் போலீசார் செங்கோட்டையருகே பிரானூர் பார்டர் அருகே வாகன சோதனை செய்தர் அப்போது கேரளாவிற்கு கனிமவளங்கள் […]

Police Department News

கஞ்சா-லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

கஞ்சா-லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது மதுரை தல்லாகுளம் போலீசார் ஜம்புராபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆஸ்பத்திரி அருகே வாலிபர் ஒருவர் பதுங்கி இருந்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவரிடம் 3 லாட்டரி சீட்டுகள் இருந்தன. அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததால் அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 2 செல்போன்கள், 2 ஏ.டி.எம். கார்டு, ரூ.4075 ரொக்கம் ஆகியவை பறிமுதல் […]

Police Department News

கோவையில் மோசடி செய்த பணத்தில் சினிமா தயாரித்த சென்னை டாக்டர் கைது- டாக்டர் மனைவியை போலீஸ் தேடுகிறது

கோவையில் மோசடி செய்த பணத்தில் சினிமா தயாரித்த சென்னை டாக்டர் கைது- டாக்டர் மனைவியை போலீஸ் தேடுகிறது கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 41). தொழில் அதிபரான இவர் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்து வருகிறார். இவர் ஆன்லைன் மூலமாக என்ன தொழில் செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என தேடினார்.இதனை பார்த்த சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பல் டாக்டர் தம்பதியான அரவிந்தன் (35). இவரது மனைவி துர்கா பிரியா (33). இவர்கள் தொழில் அதிபர் […]

Police Department News

பாலக்கோடு அருகே தூக்கிட்டு தற்கொலை! உதவி கலெக்டர் விசாரணை

பாலக்கோடு அருகே தூக்கிட்டு தற்கொலை! உதவி கலெக்டர் விசாரணை தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகேதெத்துபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்தன் மனைவி சவுந்தர்யா 19 வயது திருமணம் ஆகி 7 மாதத்தில் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். குடும்பப் பிரச்சினை காரணமாக சில தினங்களாக மனம் உடைந்து சோர்வாக காணப்பட்டுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் பின்புறம் இருந்த புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர் […]

Police Department News

மாரண்டஅள்ளி அருகே மனநலம் பாதிக்கப்பட்டசிறுமிக்கு பாலியல் தொல்லை-முதியவர் போக்சோவில் கைது

மாரண்டஅள்ளி அருகே மனநலம் பாதிக்கப்பட்டசிறுமிக்கு பாலியல் தொல்லை-முதியவர் போக்சோவில் கைது தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவள் 13 வயது சிறுமி. இந்த சிறுமிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தாள். கடந்த 10-ந் தேதி வீட்டில் அந்த சிறுமி தனியாக இருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி (வயது 60) என்ற முதியவர் சிறுமியிடம் நைசாக பேசி, அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்றார். பின்னர் சிறுமிக்கு அவர் […]