சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் கைது. திருநெல்வேலி 24.09.2020 தாழையூத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராம்நகர் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ராம்நகர் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து(35) என்பவரை தாழையூத்து காவல் ஆய்வாளர் திரு சாம்சன் அவர்கள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 1கிலோ 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Month: September 2020
சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது
சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது திருநெல்வேலி 24 .09.2020 திருக்குறுங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவடி பகுதியில் உதவி ஆய்வாளர் திரு சிவகுமார் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மாவடி ஆற்று விளை தெரு பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக பைக்கில் வைத்து மணல் திருட்டில் ஈடுபட்ட மாவடியை சேர்ந்த ரகுராம்(24) என்பவரை மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் 10 சாக்கு […]
கிணற்றில் தவறி விழுந்த நபரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய தேவர் குளம் காவல் துறையினர்
கிணற்றில் தவறி விழுந்த நபரை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய தேவர் குளம் காவல் துறையினர் திருநெல்வேலி மாவட்டம், ராஜபாளையம், மலையடிப்பட்டி, பகுதியை சேர்ந்த காளிமுத்து வயது 20/2020, மற்றும் அவர்களது நண்பர்கள் செப்டிக் டேங்க் கிளீனிங் லாரியில் ஒவ்வொரு ஊராக சென்று சுத்தம் செய்வது வழக்கம். இதன் அடிப்படையில் இன்று தேவர் குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியன லொச்சிப்பட்டி, கிராமத்திற்கு வந்த இவர்கள் தனித்தனியாக பிரிந்து வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரம் வினியோகித்து […]
அபிராமம் காவல்நிலைய பெண் தலைமை காவலருக்கு எஸ்.பி வெகுமதி அளித்து பாராட்டு.
அபிராமம் காவல்நிலைய பெண் தலைமை காவலருக்கு எஸ்.பி வெகுமதி அளித்து பாராட்டு. இராமநாதபுரம் மாவட்டம், கமுதி உட்கோட்டம்,அபிராமம் காவல் நிலைய சரகம்,நந்திசேரி சந்திப்பு சாலை அருகில்,28.04.2006-ம் ஆண்டு அபிராமம் காவல் நிலைய தலைமை காவலர் போஸ் என்பவரை சில சமூக விரோதிகள் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றது மற்றும் அபிராமம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுப்ரமணியன் என்பவரும் சில சமூக விரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கானது பரமக்குடி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் […]
மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து வழிப்பறி செய்த ரவுடி கைது
மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து வழிப்பறி செய்த ரவுடி கைது மதுரை, ஜெய்ஹிந்த்புரம், B6, காவல் நிலையம் சரகத்திற்குட்பட்ட பகுதியான ஜெய்ஹிந்த்புரம், பாரதியார் ரோடு, பூமிநாதன் காம்பவுண்டில் தன் குடும்பத்தோடு வசித்து வருபவர், துரைச்சேர்வை மகன் பால்போண்டி வயது 39/2020, 22/09/2020 ம் தேதி காலை 9 மணியளவில் ஜெய்ஹிந்தபுரம், பாரதியார் தெரு, குருகுலம் பள்ளி அருகில் பால்பாண்டி அவர்கள் நின்று கொண்டிருந்த போது ஒரு நபர் அங்கே வந்து பால்பாண்டியிடம் […]
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்
விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நல்லசிவம், அஜய்தங்கம், இளங்கோவன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், சட்டம்- […]
நெல்லையில் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது!
நெல்லையில் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது! நெல்லை பயிற்சி மையத்திற்கு வந்த இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி கேடிசி நகரைச் சேர்ந்த சுடலைமணி என்பவரின் மகன் ராஜேந்திரன் (வயது 21), கூலித்தொழிலாளியான இவர், தூத்துக்குடியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண்ணுடன் நெருங்கி பழகினார். சம்பவத்தன்று அந்தப் பெண் நெல்லையில் ஒரு பயிற்சி மையத்திற்கு வந்தார். அப்போது அவரை கடத்திச் சென்று கற்பழித்ததாக கூறப்படுகிறது இது குறித்து பெண்ணின் […]
மதுரை, தெப்பக்குளம் பகுதியில் கொள்ளையடிப்பதற்காக பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 ரவுடிகள் கைது
மதுரை, தெப்பக்குளம் பகுதியில் கொள்ளையடிப்பதற்காக பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 ரவுடிகள் கைது மதுரை மாநகர், தெப்பக்குளம் B3, காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. சிவராமகிருஷ்ணன் அவர்கள் சட்டம், ஒழுங்கு, மற்றும் குற்றத்தடுப்பு சம்பந்தமாக 21/09/2020 அன்று இரவு 8 மணியளவில் தலைமை காவலர் 1119 வரதராஜன், முநிகா 2556 செந்தில், மற்றும் 3365 அன்பு ஆகியோருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ஐராவதநல்லூர் காதியானுர் […]
ஆன் லைன் வகுப்பிற்காக செல்போன் இல்லாததால் திருட முயற்சித்த சிறுவனுக்கு 10 ஆயிரம் மதி்ப்புள்ள செல்போன் வாங்கி கொடுத்து பாடத்தில் கவனம் செலுத்த அறிவுரை வழங்கியிருக்கிறார் திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி அவர்கள்
ஆன் லைன் வகுப்பிற்காக செல்போன் இல்லாததால் திருட முயற்சித்த சிறுவனுக்கு 10 ஆயிரம் மதி்ப்புள்ள செல்போன் வாங்கி கொடுத்து பாடத்தில் கவனம் செலுத்த அறிவுரை வழங்கியிருக்கிறார் திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி அவர்கள் கொரானா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுவதால் செல்போன் இல்லாத காரணத்தால் வகுப்புகளை கவனிக்க முடியாமல் சிறுவன் அலைந்து திரிந்து அக்கம் பக்கம் பார்க்கும் இளைஞர்களை எல்லாம் பழைய செல்போன் இருக்கிறதா என கேட்டு வந்திருக்கிறான். இதனைப் பயன்படுத்திக்கொண்ட இரண்டு திருட்டு […]
யூ டியூப்பை பார்த்து நாட்டுத்துப்பாக்கி தயாரித்த 2 பேர் கைது
கடலூர், கடலூர் திருவந்திபுரம் குமாரப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நாட்டுத்துப்பாக்கி தயாரிப்பதாக திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த பகுதியை சேர்ந்த தேவதாஸ் மகன் பந்தல் வேலை செய்யும் ஆறுமுகம் (வயது 34) என்பவர் வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கு ஆறுமுகம், திருமாணிக்குழி நரிக்குறவர் காலனியை சேர்ந்த மிளகாய்தோட்டம் என்பவரது மகன் சங்கர் என்கிற சுரேஷ் […]