சென்னை: சைதாப்பேட்டை ரேஷன் கடையில் 7.36 லட்சம் ரூபாய் திருடியவர் கைது சென்னை சைதாப்பேட்டை பகுதியில் இயங்கிவந்த ரேஷன் கடையில் 7.36 லட்சம் ரூபாயை திருடியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் கோபி என போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடமிருந்து 4.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள கோபி இதற்கு முன்னதாக 6 குற்ற வழக்குகளில் கைதாகி தண்டனை பெற்று சிறையிலிருந்து வெளிவந்த நிலையில், இந்த திருட்டுசம்பவத்தில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகி உள்ளது. கொரோனா நிவாரண நிதியாக மக்களுக்கு விநியோகிக்கப்பட […]
Month: May 2021
நீலகிரி: விபத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்த ஓட்டுநர்; சமயோசிதமாக உயிரைக் காப்பாற்றிய போலீஸார்!
நீலகிரி: விபத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்த ஓட்டுநர்; சமயோசிதமாக உயிரைக் காப்பாற்றிய போலீஸார்! துரிதமாகச் செயல்பட்டு ஓட்டுநரின் உயிரைக் காத்த இந்த நெகிழ்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக காவல்துறையினரை கேரள நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூரிலிருந்து கேரளாவை நோக்கி பிக்கப் வாகனம் ஒன்று நாடுகாணி – வழிக் கடவு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் சாலையோர தடுப்பு சுவரின் மோதி கவிழ்ந்துள்ளது. […]
பூட்டிய வீட்டில் கொள்ளை; தீவிர விசாரணையில் போலீஸ்!!
பூட்டிய வீட்டில் கொள்ளை; தீவிர விசாரணையில் போலீஸ்!! கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் – திருவண்ணாமலை சாலையில் உள்ளது வடபொன்பரப்பி. இங்குள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் பிரம்மதேசம். இங்குள்ள பள்ளிவாசல் தெருவில் வசித்து வருபவர் 29 வயது நபிஸ். இவர் ரம்ஜான் பண்டிகை முடிந்த மறுநாள் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தார். இவரது வீட்டின் ஒரு பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் கூல்ட்ரிங்ஸ் கடை வைத்துள்ளார். நபீஸ் ஊருக்கு செல்லும்போது, […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மகள் முறை கொண்ட பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்த சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மகள் முறை கொண்ட பள்ளி மாணவியை கர்ப்பமாக்கி குழந்தை கொடுத்த சித்தப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் நடுவூர் காளியம்மன் கோவில் தெருவில் வசித்தவர் பாலமுருகன். இவரது மனைவி ஈஸ்வரி. இந்த தம்பதியினருக்கு 14 வயதில் மகள் உள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது தந்தையை இழந்த மாணவி, தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் தனது தாயுடன் வசித்து வருகிறார். மாணவி தற்போது விஸ்வநத்தம் அரசு உயர்நிலைப் […]
சி.ஆர்.பி.எப்.,இயக்குனருக்கு கூடுதல் பொறுப்பு
சி.ஆர்.பி.எப்.,இயக்குனருக்கு கூடுதல் பொறுப்பு என்.ஐ.எ.,எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குனர் ஜெனரல் ஒய்.சி.மோடி நாளை பணி ஓய்வு பெறுகிறார், இந்த பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படும் வரை சி.ஆர்.பி.எப்.,எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ்படையின் இயக்குனர் ஜெனரல் குல்தீப் சிங் வசம் என்.ஐ.எ.,இயக்குனர் ஜெனரல் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய J8 நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் திரு.முருகேசன்( சட்டம் ஒழுங்கு)& உதவி ஆய்வாளர் திரு.பிரதீப் (சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக சேவகர் திரு.வி.கோபி
ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய J8 நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் திரு.முருகேசன்( சட்டம் ஒழுங்கு)& உதவி ஆய்வாளர் திரு.பிரதீப் (சட்டம் ஒழுங்கு) மற்றும் சமூக சேவகர் திரு.வி.கோபி பணமிருந்தும் கொரோனா வந்தால் ஒன்றும் செய்ய முடியாத இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உணரும் வகையில் சிலர் நெஞ்சில் கடவுள் குடிபுகுந்து நன்மைகளை செய்து வருகிறார் அப்படி பட்ட மனிதர்களும் இருக்கிறார்கள் .முதலாவது காவலர்களும் சமூக சேவர்களும் இவர்கள் பல்வேறு வகையில் மக்களுக்கு உதவி செய்துவருகின்றனர். கொரோனா முழு […]
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்று பணம் ரூ.53,25,000/- பணத்தை ஏமாற்றி அபகரித்த புகாரில் விரைவு நடவடிக்கை
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி OTP எண்ணை பெற்று பணம் ரூ.53,25,000/- பணத்தை ஏமாற்றி அபகரித்த புகாரில் விரைந்து செயல்பட்டு இழந்தவரின் வங்கி கணக்கிற்கு மீள செலுத்த நடவடிக்கை எடுத்த அண்ணாநகர் சைபர் கிரைம் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் (28.05.2021). வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அன்பரசு, வ/62, த/பெ.பிச்சையப்பன் என்பவர் ONGC நிறுவனத்தில் வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர் ஆவார். 25.05.2021 அன்று […]
திருவள்ளூர் மாவட்டத்திற்கு தற்பொழுது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக Dr.V.VARUNKUMAR.,I.P.S அவர்கள்
திருவள்ளூர் மாவட்டத்திற்கு தற்பொழுது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக Dr.V.VARUNKUMAR.,I.P.S அவர்கள் இவரது பணிகள் மென்மேலும் சிறக்க போலீஸ் இ நியூஸ் குழுமத்தின் சார்பாக நல்வாழ்த்துக்கள்
கோவையில் கவச உடை அணிந்து கொரானா நோயாளிகளை நேரில் சந்தித்ததார் முதல்வர் ஸ்டாலின்அவர்கள்
கோவையில் கவச உடை அணிந்து கொரானா நோயாளிகளை நேரில் சந்தித்ததார் முதல்வர் ஸ்டாலின்அவர்கள் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 30-05-2021ஆய்வு செய்தார். அப்போது…..கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிபிஇ கிட் அணிந்தபடி கொரோனா நோயாளிகள் பிரிவில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பின்பு…கோவை மாநகராட்சி 5 மண்டலங்களில் தலா 10 இன்னோவா ஆம்புலன்ஸ் வீதம், 50 இன்னோவா ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார். இன்று…இந்திய திருநாட்டில் …ஏன்? உலகிலே…முதல் முறையாக ஒரு முதலமைச்சர் […]
மதுரை,விளாத்தூரை சேரந்தவரிடம், சாத்தமங்கலத்தை சேரந்த நான்கு நபர்கள் வழிப்பறி, கீழவளவு போலீசார் விசாரணை
மதுரை,விளாத்தூரை சேரந்தவரிடம், சாத்தமங்கலத்தை சேரந்த நான்கு நபர்கள் வழிப்பறி, கீழவளவு போலீசார் விசாரணை மதுரை மாவட்டம் கருப்பாயியூரணி அருகே உள்ள விளாத்தூரை சேர்ந்தவர் பிரபு, இவர் மதுரை மாவட்டம் கீழவளவு அருகே உள்ள சாத்தமங்கலத்தில் உள்ள அவரது உறவினர் ஜெகதாம்பாள் என்பவருக்கு உடல்நிலை சரியில்லை என அவரை பார்ப்பதற்காக கடந்த 22 ம் தேதி வந்துள்ளார். இரவு நேரமானதால் அதிகாலை ஊருக்கு திரும்பி சென்றுள்ளார் அப்போது அவர் சாத்தமங்கலம் நடுப்பட்டி அய்யனார் கோவில் அருகே வந்த போது […]