விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு ஜோதிமுத்து வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் காவல் துறையினர் சோதனை செய்வதை கண்டதும் தான் ஓட்டிவந்த வாகனத்தை கீழே போட்டு விட்டு ஓடி விட்டதாகவும் மேற்படி அந்த இரு சக்கர வாகனத்தை ( Vehicle search ) இணையதளத்தின் மூலம் search செய்து பார்த்ததில் மேற்படி இரு சக்கர வாகனம் ஆனது சிவகங்கை […]
Month: June 2021
மதுரை மாநகர தல்லாகுளம் போக்குவரத்து போலீசாருக்கு தல்லாகுளம் போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் அறிவுரை
மதுரை மாநகர தல்லாகுளம் போக்குவரத்து போலீசாருக்கு தல்லாகுளம் போக்குவரத்து கூடுதல் உதவி ஆணையர் மற்றும் போக்குவரத்து ஆய்வாளர் அறிவுரை மதுரை கோரிபாளையம் சிக்னல் போக்குவரத்துகாவலர்க்கு ரோல்கால் நடைபெற்றது.இதில்போக்குவரத்து காவல் கூடுதல் உதவி ஆணையார்திரு. மாரியப்பன் அவர் களும் மற்றும் தி௫.கணேஷ் ராம்R.I,அவர்களும்போக்குவரத்து காவலருக்கு, பொதுமக்களிடம் அணுக வேண்டிய நடைமுறை பற்றியும் கொரோனா விழிப்புணர்வும் அறிவுரையும் வழங்கினார்.
மதுரை, செல்லூர் பகுதியில் தங்கநகை திருட்டு, செல்லூர் போலீசார் தீவிர விசாரணை
மதுரை, செல்லூர் பகுதியில் தங்கநகை திருட்டு, செல்லூர் போலீசார் தீவிர விசாரணை மதுரை மாநகர் செல்லூர் D2, குற்றப்பிரிவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான செல்லூர் ஜீவா ரோடு, வள்ளுவர் தெருவில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் திருமதி. கவிதா, இவர் கணவர் வடிவேல்ராஜா, மற்றும் இவரது மகன் ஜெயசூர்யா ஆகியோருடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகின்றனர். இவர் பீபீகுளத்தில் உள்ள தீன் பிரியாணிக் கடையில் வேலை பார்த்து வருகிறார், இவரது கணவர் மதுரை, கீழமாசி வீதியில் உள்ள […]
தமிழக டி.ஜி.பி., யாக திரு. சைலேந்திரபாபு நியமனம். இன்று பதிவி ஏற்கிறார்
தமிழக டி.ஜி.பி., யாக திரு. சைலேந்திரபாபு நியமனம். இன்று பதிவி ஏற்கிறார் தமிழக டி.ஜி.பி., திரிபாதி அவர்கள் இன்று ஓய்வு பெறும் நிலையில் புதிய டி.ஜி.பி., யாக சைலேந்திரபாபு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., யாக இருப்பவர் திரிபாதி அவர்கள் இவர் இன்று புதன் கிழமை ஓய்வு பெறுகிறார். அதையொட்டி தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.,யாக டாக்டர்.சைலேந்திரபாபு அவர்கள் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற […]
தமிழ்நாடு காவல்துறை 1999 பேட்ஜ் உதவும் உறவுகள் சார்பாக மறைந்த காவலர் சையது முகமது அவர்களின் குடும்பத்தாருக்கு நிதி வழங்கப்பட்டது
தமிழ்நாடு காவல்துறை 1999 பேட்ஜ் உதவும் உறவுகள் சார்பாக மறைந்த காவலர் சையது முகமது அவர்களின் குடும்பத்தாருக்கு நிதி வழங்கப்பட்டது மதுரை மாநகர் விளாச்சேரி பகுதியில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தவர் சையது முகமது,இவருக்கு S. ரஷியாபானு, என்ற மனைவியும் S.முகமது தெளபிக், முகமது தாரிக், முகமது நிவாஸ் என்ற மூன்று மகன்களும் உள்ளனர்.இவர் தமிழ்நாடு காவல்துறைப்பணியில் 1999 ம் வருடம் சேர்ந்து பணிபுரிந்து வந்தார் இவர் இறுதியாக மதுரை, திருநகர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து […]
கணவரை கொலை செய்த மனைவி கைது
கணவரை கொலை செய்த மனைவி கைது தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழபூவாணி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாரியப்பன் வயது 56. இவரது மனைவி பேச்சியம்மாள் வயது 44. இருவரும் தங்களுக்குள் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 வருடங்களாக தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 27ம் தேதி மாரியப்பன் கீழபூவாணியில் உள்ள ஒரு புஞ்சை நிலத்தில் கல்லால் தாக்கப்பட்டு படுகாயத்துடன் கிடந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் பாளையங்கோட்டை […]
கணவரால் கைவிடப்பட்டு, ஐஸ்கிரீம் விற்ற பெண் போலீஸ் அதிகாரியாக உயர்ந்தார்
கணவரால் கைவிடப்பட்டு, ஐஸ்கிரீம் விற்ற பெண் போலீஸ் அதிகாரியாக உயர்ந்தார் கேரளாவில் காதல் கணவரால் கைவிடப்பட்டதால், குழந்தையுடன் சாலையில் ஐஸ்கிரீம் விற்று பிழைத்து வந்த பெண், அதே ஊரில் போலீஸ் அதிகாரியாக பணியில் அமர்ந்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். கணவரால் கைவிடப்பட்ட பெண்கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிராம்குளத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் எஸ்.ஐ.ஆனி சிவா( வயது 31). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது ஒருவரை காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பையும் […]
பொதுமக்களிடம் அன்பாக நடக்க போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை
பொதுமக்களிடம் அன்பாக நடக்க போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை பொதுமக்களிடம் அன்பாகவும் நல் உறவாகவும் நடக்க வேண்டுமென போலீசாருக்கு காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிப்பிரியா அவர்கள் அறிவுரை வழங்கினார், திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா திண்டுக்கல்லில் உள்ள காவல்நிலையங்களை ஆய்வு செய்தார் அங்கிருந்த காவல் அதிகாரிகளும் காவல் துறையினரும் பொதுமக்களிடம் கண்ணியமிக்க முறையில் நடந்து கொள்ள வேண்டும் பொது மக்களிடம் அன்பாகவும் நல்லுறவாகவும் பழக வேண்டும் என்பது குறித்தும் அறிவுரைகளை எடுத்து கூறினார். அப்போது அவர் […]
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பழங்களை வைத்து மது தயாரித்து விற்பனை செய்த நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த ஜெய்ஹிந்துபுரம் போலீசார்
மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பழங்களை வைத்து மது தயாரித்து விற்பனை செய்த நபர்களை கைது செய்து சிறையில் அடைத்த ஜெய்ஹிந்துபுரம் போலீசார் மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலைய சட்டம் ஒழுங்கு சார்பு ஆய்வாளர் திரு.C.கார்த்திக் அவர்கள் கடந்த 20 ம் தேதி மாலை சுமார் 5.30 மணியளவில் கொரோனா நோய் தொற்று காரணமாக அரசு மது பானக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் சரகத்தில் யாரும் சில்லரையாக மது விற்பனை செய்து வருகிறார்களா? என கண்காணித்து நிலைய முதல்நிலை […]
மதுரை மேலவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர்களை கைது செய்த திடீர் நகர போலீசார்
மதுரை மேலவாசல் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபர்களை கைது செய்த திடீர் நகர போலீசார் மதுரை மாநகர் C1, காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பணராஜ் அவர்கள் நிலையத்தில் பணியில் இருக்கும் போது காலை சுமார் 11. 50 மணியளவில் அவரது ரகசிய தகவலாளி ஒருவர் நிலையம் வந்து கொடுத்த ரகசிய தகவலின்படி மதுரை மேலவாசல் அருகே அம்மா உணவகம் பின்புறம் சிலர் சட்ட விரோதமாக கஞ்சா விற்பதாக அறிந்து ஆய்வாளர் திரு முகமது […]