வீராங்கனைக்கு பாலியல் தொல்லை? சென்னை தடகள பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தனியார் அகாடமி தடகள பயிற்சியாளர் நாகராஜன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் உள்ள தனியார் தடகள அகாடமியில் பயிற்சி பெற்ற வீராங்கனை அளித்த புகாரின் பேரில் நாகராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Day: May 28, 2021
வைத்தியம் சொன்ன சாப்பாட்டு ராமனுக்கு கரோனா!
வைத்தியம் சொன்ன சாப்பாட்டு ராமனுக்கு கரோனா! கரோனாவுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்த சாப்பாட்டு ராமன் எனப்படும் சித்த மருத்துவர் பொற்செழியன் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கூகையூரில் பொற்செழியன், ஸ்ரீ அய்யப்பன் சித்தா கிளினிக்கை நடத்தி வருகிறார். இவர் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சித்தா கிளினிக்கில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கிளினிக்கில் இருந்து ஆங்கில […]
மூன்றுமுறை கருவுற்றேன்…ஏமாற்றிவிட்டார்”-முன்னாள் அமைச்சர் மீது நாடோடிகள் பட நடிகை புகார்!!
”மூன்றுமுறை கருவுற்றேன்…ஏமாற்றிவிட்டார்”-முன்னாள் அமைச்சர் மீது நாடோடிகள் பட நடிகை புகார்!! முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை ஒருவர் புகார் அளித்துள்ளது ‘நாடோடிகள்’ படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. இவர் முன்னாள் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வழக்கறிஞருடன் சென்ற சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். மலேசியாவை பூர்வீகமாகக் கொண்ட […]
கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை அதிகாரிகள்..!
கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை அதிகாரிகள்..! சென்னை மாவட்டம் 25/5/2021 செவ்வாய்கிழமை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் அவதிப்பட்டு, உதவியின்றி தவிக்கும் பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வீதி வீதியாக சென்று, அத்தியாவசியமின்றி ஊர்சுற்றி வரும் இரு சக்கர வாகனம், மற்றும் ஆட்டோ உள்ளிட்ட கார் ஓட்டுனர்களிடம், தவிர்க்க முடியாத நிலையில் மட்டும் வெளியில் வரவேண்டும் மற்றபடி எங்களை அணுகலாம் என தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் ஏ.டி.ஜி.பி. ஜெயந்த் […]
தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!
தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! பொது மக்கள் நலன் கருதி, 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் ‘மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு […]
இது சத்தியம்….. தேவையற்ற பயணம் கிடையாது.. – வாகன ஓட்டிகள் தந்த உறுதிமொழி படிவம்…!
இது சத்தியம்….. தேவையற்ற பயணம் கிடையாது.. – வாகன ஓட்டிகள் தந்த உறுதிமொழி படிவம்…! கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர் பகுதியில் உள்ள புதிய பஸ் ஸ்டேண்டு, நேதாஜி சிலை சந்திப்பு, சித்தூர்கேட், நெல்லூர்பேட்டை ஏரிக்கரை, உள்ளி கூட்டு ரோடு, பரதராமி, சைனகுண்டா, பத்திரபல்லி உள்ளிட்ட பல இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து போலீசார் கண்காணித்தும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டும்வருகின்றனர்.இந்த […]
வெங்காய மூட்டைகளுக்குள் மதுபாட்டில்களை கடத்திய நபர்கள்..!
வெங்காய மூட்டைகளுக்குள் மதுபாட்டில்களை கடத்திய நபர்கள்..! கடலூர் மாவட்டம், வேப்பூர் கூட்ரோடு அருகே இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் தலைமையிலான போலீசார் 26ஆம் தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரு மார்க்கெட் பகுதியிலிருந்து 300 மூட்டைகள் வெங்காயம் ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது லாரி ஓட்டுநரும் லாரியில் அமர்ந்திருந்த இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் முன்னுக்குப்பின் முரணான தகவலைக் கூறியதால் சந்தேகமடைந்த இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், லாரி முழுவதையும் சோதனை செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.போலீசார் […]
கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி அருப்புக்கோட்டை அருகேயுள்ள கோபாலபுரம் கிராமத்தில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம்:- கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி அருப்புக்கோட்டை அருகேயுள்ள கோபாலபுரம் கிராமத்தில் நடைபெற்றது. பொதுவாக கொரோனா தொற்றானது கிராமம் நகரம் என பேதமின்றி நோய்தாக்கி வருகிறது. அந்த நோய்த்தொற்றை பரவாமல் தடுப்பதற்காக அருப்புக்கோட்டை குற்றபிரிவு ஆய்வாளர் திரு.ராஜபுஷ்பா அவர்கள் கிராமத்தில் உள்ள மக்களை சந்தித்தார். அப்போது பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது சமூக இடைவெளியை கடைபிடித்தனர். அதன் பின்பு கொரோனா விளிப்புணர்வை பற்றியும் அதை வராதவண்ணம் கடைபிடிக்கும் வழிகளை எடுத்துரைத்தார்.
கொரோனா ஊரடங்கனால் உண்ண உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவளிக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விஜய் ரசிகர் மன்றத்தினர்…
விருதுநகர் மாவட்டம்:- கொரோனா ஊரடங்கனால் உண்ண உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவளிக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் விஜய் ரசிகர் மன்றத்தினர்… இந்த அரும்பணிகளானது அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் கோவில் வளாகத்தில் மற்றும் சாலைகளின் ஓரத்தில் தங்கி இருக்கும் நபர்களுக்கும் உணவளிக்கப்பட்டது. நாம் பூமியில் வாழும் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதற்கு ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு நல்லகாரியத்தை செய்துவிட்டு செல்வது வழக்கம். ஆனால் தான் வாழும்போதே நற்பணிகளை செய்து வருபவர்களாக அருப்புக்கோட்டை அருகேயுள்ள தனியார் […]
நாடகக் கலைகள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு.
நாடகக் கலைகள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு. திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி காங்கயம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.தனராசு அவர்கள் காங்கேயம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நாடகக் கலைகள் மூலம் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.