Police Department News

மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பேரளம் காவல் நிலையம் தமிழக அரசின் பாராட்டு

மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பேரளம் காவல் நிலையம்தமிழக அரசின் பாராட்டு மாவட்ட அளவில் காவல் நிலையங்களில் அதிக அளவில்குற்ற வழக்குகளை நீதிமன்றங்களில் முடித்தல்,பிடிக்கட்டளை நிறைவேற்றுதல்,காவல் நிலையத்தினை சுகாதாரமான முறையில் பராமரித்தல் உள்ளிட்ட நடைமுறை பணிகளை சிறப்பாக செய்து செயல்பட்டுமாவட்ட அளவில் முதலிடம் பெற்றபேரளம் காவல் நிலையத்திற்குதமிழக அரசால்2019 – 2020 ஆண்டிற்கான கோப்பை(TROPHY) வழங்கப்பட்டது. இன்று (28.08.2021)மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள்பேரளம் காவல் ஆய்வாளர் திரு.மணிமாறன்என்பவரைநேரில் அழைத்துகோப்பையை வழங்கி பாராட்டினார்கள்

Police Department News

திருவாரூர் மாவட்ட காவல் ஆய்வாளருக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு.

திருவாரூர் மாவட்ட காவல் ஆய்வாளருக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு. காவல்துறை-மத்திய மண்டலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில்(HOTSPOT) அதிகளவில் விழிப்புணர்வு முகாம்களை சிறப்பான முறையில் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி குற்றச் சம்பவங்களை குறைக்க நடவடிக்கை எடுத்த திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் செல்வி.ஷர்மிளாஎன்பவரைதிருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS அவர்கள் இன்று(27.08.21)நேரில் அழைத்து பாராட்டினார்கள்.