பொள்ளாச்சியில் காக்கா பிரியாணி விற்பனையா?- கடைகளில் ஆய்வு மேற்கொள்ள போலீசார் திட்டம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெரியாக்கவுண்டனூரில் கடந்த சில நாட்களாக காகங்கள் ஆங்காங்கே இறந்து கிடந்தன. எதனால் காகங்கள் இறந்து கிடக்கிறது என தெரியாமல் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குழப்பம் அடைந்தனர். யாராவது விஷம் வைத்து கொன்றனரா? அல்லது இயற்கையாகவே இறந்து விழுந்ததா? என தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த மக்கள் அதனை கண்டுபிடிக்க முடிவு செய்தனர். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த விவசாயியான […]
Month: March 2023
தென்காசிசாம்பவர்வடகரையில் தோட்டத்தில் வாழை இலை திருடியதை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு
தென்காசிசாம்பவர்வடகரையில் தோட்டத்தில் வாழை இலை திருடியதை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு சாம்பவர்வடகரையை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 32) என்பவர் அங்குள்ள வண்ணான்குளத்தில் தோட்டம் வைத்துள்ளார். அதில் பயிரிட்டுள்ள வாழைமரங்களில் இருந்து சில நாட்களாக வாழை இலைகளை அதே ஊரில் வசிக்கும் முருகன்(36), அவரது தாயார் சீனியம்மாள் ஆகியோர் திருடிச்சென்றுள்ளனர். இதனை சுப்பிரமணியன் தட்டிக்கேட்கவே, ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளால் அவரை வெட்டினார். இதில் காயம் அடைந்த சுப்பிரமணியன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது புகாரின்பேரில் சாம்பவர்வடகரை […]
வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு- காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு- காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மணப்பாறை பகுதியில் நவீன அரிசி ஆலையில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி. தமிழ்நாட்டில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டு வந்தது.அதனை மறுத்து வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து மாவட்ட வருவாய் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கோரி தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியது. அதனடிப்படையில் […]
சிவகிரியில் பழிக்குப்பழியாக சம்பவம்- ஜாமீனில் வந்த வாலிபர் கொலையில் 7 பேரை பிடித்து விசாரணை
சிவகிரியில் பழிக்குப்பழியாக சம்பவம்- ஜாமீனில் வந்த வாலிபர் கொலையில் 7 பேரை பிடித்து விசாரணை தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தேவிபட்டணம் காமராஜர் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 40). கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதியன்று சிவக்குமார் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 11-ந்தேதி அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நேற்று மதியம் சிவகிரியில் ஒரு வக்கீலை பார்ப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த […]
மார்ச் 15
பென்னாகரம் காவல் நிலையத்தில் கோடைக்காலம் என்பதால் நீர்மோர் பொதுமக்களுக்கு தினசரி இலவசமாக வழங்கப்படுகிறது…
மார்ச் 15பென்னாகரம் காவல் நிலையத்தில் கோடைக்காலம் என்பதால் நீர்மோர் பொதுமக்களுக்கு தினசரி இலவசமாக வழங்கப்படுகிறது… தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட பென்னாகர காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் இமையவர்மன்அவர்களின் ஆலோசனைப்படி இன்ஸ்பெக்டர்முத்தமிழ் செல்வன்காவல் நிலையத்தில் மனு கொடுக்கும் வரும் பொது மக்களுக்கு நேர் மோர் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்.. பென்னாகரம் போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காகடாக்டர். மு. ரஞ்சித் குமார்மற்றும் சங்கீதா நாகராஜ்வெற்றிவேல் அன்பு
பெற்றோர் ஏற்கமாட்டார்கள் என நினைத்து தற்கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி
பெற்றோர் ஏற்கமாட்டார்கள் என நினைத்து தற்கொலை செய்த கள்ளக்காதல் ஜோடி நாகை மாவட்டம் வடபதி அருகே உள்ள சோழம்பேட்டையை சேர்ந்தவர் கிருத்திகா–(வயது26). சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை அருகே உள்ள நாச்சாங்குளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(30). இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் கோவை பீளமேடு அருகே சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன. கிருத்திகாவுக்கும், […]
மதுரையில் அரசு கேபிள் டிவி அதிகாரிகள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலந்துரையாடல் கூட்டம்
மதுரையில் அரசு கேபிள் டிவி அதிகாரிகள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலந்துரையாடல் கூட்டம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி அதிகாரிகள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கலந்துரையாடல் கூட்டம் மதுரை கேபிள் டிவி அலுவகத்தில் நடைபெற்றது இதில் தலைமை பொது மேலாளர் (செயலாக்கம்) ஜெயினுல்லாதீன், சென்னை மண்டல துணை மேலாளர் திரு. மாரிமுத்து மதுரை தனி வட்டாச்சியர் திரு. இளமுருகன் தொழில் நுட்ப உதவியாளர் திரு. ராஜன் ஆகியோர்களுடன் மதுரை கேபிள் டிவி ஆப்ரேட்டர்களும் கலந்து […]
சங்கரன்கோவிலில் பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
சங்கரன்கோவிலில் பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன்நகர் 3 வது தெருவை சேர்ந்தவர் கனேசன் மகன் வேலுச்சாமி வயது 23இவரது மனைவி துரைச்சி வேலுச்சாமி அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி துரைச்சியிடம் தகராறு செய்து வந்துள்ளார்இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலுச்சாமி மீது சங்கரன் கோவில் டவுன் காவல் நிலையத்திவ் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி இனி மேல் பிரச்சனை […]
கோவையில் வடமாநில வாலிபர்களை தாக்கிய கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது- போலீசார் அதிரடி நடவடிக்கை
கோவையில் வடமாநில வாலிபர்களை தாக்கிய கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது- போலீசார் அதிரடி நடவடிக்கை கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான வட மாநில வாலிபர்கள் தங்கியிருந்து பனியன் கம்பெனி, மற்றும் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாநில வாலிபர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதைத்தொடர்ந்து வடமாநில வாலிபர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து தமிழக அதிகாரிகள் மற்றும் போலீசார் […]
கை, கால்கள் முறிந்த நிலையில் தேர்வெழுத வந்த பிளஸ்-2 மாணவி
கை, கால்கள் முறிந்த நிலையில் தேர்வெழுத வந்த பிளஸ்-2 மாணவி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஓ.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் உமாமகேஸ்வரி (வயது 17). திருமங்கலம் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாடியில் காய போட்டிருந்த துணியை எடுக்க உமாமகேஸ்வரி சென்றபோது எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். […]