Police Department News

மதுரையில் காவல் துறையினரின் கும்ப வாரிசுளுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம்

மதுரையில் காவல் துறையினரின் கும்ப வாரிசுளுக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் மதுரையில் போலீசார், தீயணைப்பு படை மற்றும் ஊர்க்காவல் படை ஆகியவற்றில் வேலை பார்க்கும் ஊழியர்களின் வாரிசுகளுக்கான தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை 25-ந் தேதி மற்றும் நாளை மறுநாள் 26-ந்தேதிகளில் நடக்க உள்ளது. மதுரை விமான நிலையம் அருகே வலையப ட்டியில் உள்ள நாகரத்தினம் அங்காளம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை […]

Police Department News

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தங்கி செல்போன் திருட்டில் ஈடுபட்ட முதியவர்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தங்கி செல்போன் திருட்டில் ஈடுபட்ட முதியவர் மதுரை அனுப்பானடி, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது29), இவரது தாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நவீன்குமார், தாய்க்கு உதவியாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கியிருந்தார். அவர் இரவு படுத்து தூங்கியபோது மர்ம நபர் செல்போனை திருடிச் சென்று விட்டார். இதுபற்றி அறிந்த நவீன்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசா ரணை […]

Police Department News

ராணுவ வீரர் மனைவியை மிரட்டி நகை பறித்த கொள்ளையர்களுக்கு வலை வீச்சு

ராணுவ வீரர் மனைவியை மிரட்டி நகை பறித்த கொள்ளையர்களுக்கு வலை வீச்சு மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி, குராயூரை சேர்ந்தவர் அய்யனார் (வயது32), ராணுவ வீரர். இவரது மனைவி கவுசல்யா(28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அய்யனார் காஷ்மீர் ராணுவ முகாமில் தங்கி பணியாற்றி வருகிறார். கவுசல்யா தனது குழந்தைகளுடன் குராயூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அருகில் உள்ள வீட்டில் மாமியார், மாமனார் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 2 மர்ம நபர்கள் […]

Police Department News

பழனியில் ரேசன் அரிசி பதுக்கிய ரைஸ் மில் அதிபர் கைது

பழனியில் ரேசன் அரிசி பதுக்கிய ரைஸ் மில் அதிபர் கைது பழனி அருகே சத்திரப்பட்டியை சேர்ந்தவர் நடராஜ்(47). கே.வேலூரில் ரைஸ்மில் வைத்துள்ளார். இந்த ரைஸ்மில்லில் ரேசன் அரிசியை வாங்கி பட்டைதீட்டி விற்பனை செய்வதாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசார் இந்த மில்லில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 450 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேனை பறிமுதல் செய்தனர். […]

Police Department News

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான வாலிபரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை

பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான வாலிபரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு சில அமைப்புகளை தடை செய்தது. அப்போது கோவையில் 6 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. மேலும் 2 கடைகளில் டயர் எரிப்பு சம்பவம், 2 அரசு பஸ்கள் மீது கல் வீச்சு உள்ளிட்ட 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 9 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது […]

Police Department News

பத்தாண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கோவையில் கைது.

பத்தாண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கோவையில் கைது. பல்வேறு திருட்டு வழக்குகளில் ஆஜராகமல் தலைமறைவாக இருந்தவரை தல்லாகுளம் போலீசார் கோவையில் கைது செய்தனர். இவர் மீது மதுரை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. இவை தவிர 55க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் கோர்ட்டில் ஆஜராகமல் பத்தாண்டுகளாக்கு மேலாக தப்பி வந்தார். இவரை பிடிக்க தல்லாகுளம் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் தேடி வந்தனர். விசாரணையில் கோவையில் தங்கிய […]

Police Department News

மதுரை மாநகர் குற்ற சரகத்தில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு

மதுரை மாநகர் குற்ற சரகத்தில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு பாராட்டு மதுரை மாநகரில் நகர் குற்ற சரகத்தில் குற்றம் நடவாமலும், நடந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைந்து பிடித்து, களவு போன சொத்துக்களை விரைந்து செயல்பட்டு பறிமுதல் செய்த நற்செயலுக்காக மதுரை மாநகர் காவல் ஆணையர் அவர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கோட்டை முனியாண்டி அவர்களை பாராட்டி சான்று வழங்கினார்

Police Department News

தர்மபுரி மாவட்டத்தில் டிரைவரை கட்டி போட்டு லாரி கடத்தல்

தர்மபுரி மாவட்டத்தில் டிரைவரை கட்டி போட்டு லாரி கடத்தல் தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள எச்.அக்ரகாரம் கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் 25 ஆண்டுகளாக அரூரில் நெல் வியாபாரம் செய்து வருகிறார். அவரது ஓட்டுநர் கிருஷ்ணன் திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி பகுதியிலிருந்து 230 நெல் மூட்டைகளை விலைக்கு வாங்கி லாரியில் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்போது நரிப்பள்ளி சோதனை சாவடியில் இருசக்கர வாகனத்தில் வந்த ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் லாரியை வழி மறித்துள்ளனர். பின்னர் […]

Police Department News

இந்தி மொழியில் பேசி வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

இந்தி மொழியில் பேசி வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூருக்கு மீண்டும் வந்த வண்ணம் உள்ளனர்.அவர்கள் கூறும் போது, தவறான வீடியோக்கள் மூலம் அனைவரும் அச்சமடைந்ததாகவும் தற்போது அவை அனைத்தும் பொய்யானவை என தெரியவந்துள்ளது. எனவே பயமின்றி மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளோம். தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றனர். மேலும் ரெயில்வே காவல்துறையினர், புலம்பெயர் தொழிலாளர்க ளுக்கு இந்தி மொழியில் பேசி நீங்கள் பாதுகாப்பாக உள்ளனர். […]

Police Department News

கலர் லேப் நிறுவனத்தில் ரூ.21 லட்சம் சுருட்டிய ஊழியர்- 4 வீடுகளை வாடகைக்கு எடுத்து உல்லாசம்

கலர் லேப் நிறுவனத்தில் ரூ.21 லட்சம் சுருட்டிய ஊழியர்- 4 வீடுகளை வாடகைக்கு எடுத்து உல்லாசம் சாலிகிராமம், குமரன் காலனி, 2-வது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். தொழில் அதிபரான இவர் பிரபல கலர் லேப் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 28-ந் தேதி இவரது வீட்டில் ரூ1½ கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்க பணம் ரூ.13½ லட்சம் கொள்ளை போனது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்து என்பவரை விருகம்பாக்கம் […]