தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி காமராஜர் தெருவை சேர்ந்தவர் சேர்மன்(25). இவர் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும் சேர்மனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சேர்மன் தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதற்கு […]
Month: March 2023
ஒரே இடத்தில் 40 மயில்கள் செத்து கிடந்ததால் பரபரப்பு- விஷம் வைத்து சாகடிப்பா?
ஒரே இடத்தில் 40 மயில்கள் செத்து கிடந்ததால் பரபரப்பு- விஷம் வைத்து சாகடிப்பா? மதுரை மாவட்டம் பூலாங்குளம் கிராமத்தில் 100 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதன் அருகே நீரோடை, தென்னந்தோப்பு, புதர்களுடன் காட்டுப்பகுதி உள்ளன. அந்த பகுதியில் தேசிய பறவையான மயில் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. நேற்று முன்தினம் மாலை அந்த காட்டுப்பகுதியிலும், வயல்வெளியிலும் மயில்கள் கொத்துக்கொத்தாக செத்து கிடந்தன. இதுகுறித்து தகவல் அறிந்து கருப்பாயூரணி போலீசார் விரைந்து வந்தனர். மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு […]
தென்காசி மாவட்ட போலீஸ் பொது மக்களுக்கு எச்சரிக்கை
தென்காசி மாவட்ட போலீஸ் பொது மக்களுக்கு எச்சரிக்கை மாணவர்களின் லேப்டாப் திட்டம் 2023 ஆண்டுகான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன லேப்டாப் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி பொய்யானது. இப்போலியான செய்தியை நம்பி யாரும் வாட்ஸ்அப்பில் கிளிக் செய்ய வேண்டாம் பிறருக்கு ஷேர் செய்ய வேண்டாம் என பொதுமக்களை தென்காசி மாவட்ட போலீசார் எச்சரித்துள்ளனர்.
மதுரை ஜெயிலில் மகளிர் தினம் கொண்டாடிய பெண் கைதிகள்
மதுரை ஜெயிலில் மகளிர் தினம் கொண்டாடிய பெண் கைதிகள் தென் தமிழகத்தில் மிகப்பெரிய ஜெயில்களில் ஒன்று மதுரை மத்திய ஜெயில் ஆகும். இங்கு 1,850 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 100 பெண் கைதிகள் தனி சிறையில் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக சிறையில் இருக்கும் போது பல்வேறு சுயதொழில் பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன. அதில் உணவு தயாரிப்பது, தையல், தறி நெய்தல் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். பெண் கைதிகள் தயாரிப்பில் நெய்யப்படும் சுங்கடி சேலைகள் ஜெயில் பஜார் அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு […]
காளி கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் 3-காட்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு – பொதுமக்கள்அஞ்சலி
காளி கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் 3-காட்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு – பொதுமக்கள்அஞ்சலி தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே உள்ள காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (50) இவருக்கு 2 ஏக்கர் விவசாய நிலத்தில் சோளம், ராகி, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளார். இரவு நேரத்தில் யானை மற்றும் காட்டுப்பன்றி தொல்லை காரணமாக தனது விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்சார ஒயர்கள் அமைத்து உள்ளார். இந்த மின் ஒயர்கள் நேரடியாக மின்சார கம்பத்திலிருந்து […]
பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு செய்து
நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு செய்துநோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவிற்க்கு சென்று சுகாதார மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்,விபத்தும் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு சுகாதாரமாகவும் சிறந்த முறையில் செயல்படுவதாக மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.அதனை தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு […]
தென்காசியில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்
தென்காசியில் சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தின் மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் தென்காசியில் நடைபெற்றது. இதில் தென்காசி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், முதன்மை சார்பு நீதிபதியுமான ரஸ்கின் ராஜ் மற்றும் தென்காசி கூடுதல் சார்பு நீதிபதி மாரீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வக்கீல்கள் செந்தூர் பாண்டியன், சங்கர சுப்பிரமணியன் முத்துக்குமார் தாஹிரா பேகம் கவுரி, பூசை துரைச்சி, கிரிஜா கோபால கிருஷ்ணன் ஆகியோர் […]
கார் ஏற்றி தாயை கொன்ற மகன் கேரளாவுக்கு தப்பி ஓட்டம்
கார் ஏற்றி தாயை கொன்ற மகன் கேரளாவுக்கு தப்பி ஓட்டம் செங்கோட்டை தாலுகா அச்சன்புதூரை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவருடைய மனைவி முருகம்மாள் (வயது 62). இந்த தம்பதிக்கு சங்கர் என்ற மோகன் (45), உதயமூர்த்தி (38) உள்பட 3 மகன்கள் உள்ளனர். சங்கரநாராயணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இலத்தூர் விலக்கு பகுதியில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராவதற்காக நேற்று […]
தண்டவாளத்தில் பிணமாக கிடந்த பா.ம.க. மகளிர் அணி நிர்வாகி- சாவில் மர்மம் இருப்பதாக தாய் போலீசில் புகார்
தண்டவாளத்தில் பிணமாக கிடந்த பா.ம.க. மகளிர் அணி நிர்வாகி- சாவில் மர்மம் இருப்பதாக தாய் போலீசில் புகார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி சண்முகத்தாய் (வயது 70). இவர்களது மகள் மாரியம்மாள். மாரியம்மாள் குருவிகுளம் யூனியன் பா.ம.க. மகளிர் அணி தலைவியாக இருந்து வந்தார். இவர் தன் கணவரை விட்டு பிரிந்து ரெங்கசமுத்திரத்தில் தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்தபோது […]
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
மோட்டார் சைக்கிள்கள் மோதல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்ப நாயக்கனூர் ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்தவர் பெரிய ஒச்சான். இவரது மகன் லோகநாதன் (வயது 21), கல்லூரி மாணவர். இவர் உசிலம்பட்டியில் இருந்து தனது வீட்டிற்கு மதுரை நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் நக்கலப்பட்டி அருகே உள்ள நல்லமாபட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வம் (58) மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். நல்லமாபட்டி அருகே எதிர்பாராதவிதமாக இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பலமாக மோதிக்கொண்டன. இதனால் […]