கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவர்கள் சென்னையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தரமணி பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்ற ஹேமச்சந்திரன் (எ) அப்பு உட்பட 3 குற்றவாளிகள் J-13 தரமணி காவல் குழுவினரால் கைது (08.02.2021). Trio nabbed by J-13 Taramani police team for attempting to steal money from temple hundial (08.02.2021) சென்னை, தரமணி, பகுதியில் உள்ள வீரசக்தி விநாயகர் கோயிலிலிருந்து 06.02.2021 அன்று கோயில் […]
Day: February 9, 2021
மீஞ்சூர் அருகே மனைவியின் கண் எதிரேயே கள்ளக்காதலனை அவரது கணவர் அடித்துக்கொன்றார். பின்னர் உடலை மோட்டார் சைக்கிளில் எடுத்து செல்லும்போது கணவன், மனைவி இருவரும் போலீசாரிடம் சிக்கினர்.
மீஞ்சூர், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வாயலூர் ஊராட்சியில் அடங்கிய ராமநாதபுரம் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் தேவேந்திரசிங் (வயது 41). உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவருடைய மனைவி சாயா (33). இவர்கள் இருவரும் கடந்த 8 மாதங்களாக அங்கு தங்கியிருந்தனர். அதே பகுதியில் மனோஜ் (30) என்பவரும் தங்கி இருந்தார். இவரும் அதே மாநிலத்தை சேர்ந்தவர்தான். இவர்கள் 3 பேரும் கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தனர். கள்ளக்காதல் தேவேந்திரசிங் வெளிவேலைகளுக்கு சென்றுவிட்டார். […]
சென்னை விமான நிலையத்தில் ரூ.49 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஹாரூன் ரசித் (வயது 22) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவரை தனிஅறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தபோது, அவர் அணிந்து இருந்த ஆடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.17 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் […]
போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்றவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்
போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்றவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டனர் சுமார் ரூ .2.50 கோடி மதிப்புள்ள திருநின்றவூர் சரஸ்வதிநகர் விரிவாக்கத்தில் உள்ள நிலத்தினை போலியான ஆவணங்கள் மூலம் அபரிகரித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மத்திய குற்றப்பிரிவினரால் கைது (08.02.2021) Central Crime Branch nabbed Trio of the same family involved in Land Grabbing (08.02.2021). நம்பிக்கைநாதன் என்பவருக்கு சொந்தமான திருவள்ளூர் மாவட்டம் ஆவடிவட்டம் பகுதியில் உள்ள 0.93 […]
வழிதவறி வந்து மயக்க நிலையில் இருந்த முதியவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த காவலர்
வழிதவறி வந்து மயக்க நிலையில் இருந்த முதியவரை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த காவலர் திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டி விளக்கு பகுதியில் வயதான முதியவர் மயக்க நிலையில் இருப்பதாக மாவட்ட தலைமைக் காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு (Master control) தகவல் வந்ததையடுத்து உடனடியாக அருகில் உள்ள காவல் நிலைய இரவு ரோந்து காவலருக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைவாக சென்ற முதல்நிலை காவலர் திரு.பேதுரு அவர்கள் முதியவரை மீட்டு அருகில் உள்ள புறக்காவல் நிலையத்தில் தங்க வைத்து அவருக்கு […]