வெடி விபத்தில் தொழிலாளி பலி- பட்டாசு கடை உரிமையாளர் கைது விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வைரமுத்து(வயது40). இவர் கண்டியாபுரம் செல்லும் வழியில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இங்கு நேற்று மதியம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக்கொண்டே இருந்ததால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. இந்த விபத்தில் கடையில் இருந்த தொழிலாளி கோட்டைபட்டியை சேர்ந்த செந்தில்குமார் (32) என்பவர் உடல் கருகி பலியானார். மேலும் கடையின் […]
Month: May 2023
தொழிலாளி பரிதாப சாவு; வாலிபர் உள்பட 5 பேர் படுகாயம்
தொழிலாளி பரிதாப சாவு; வாலிபர் உள்பட 5 பேர் படுகாயம் சிவகங்கை மாவட்டம், மழவராயனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 33). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் திருப்பாச் சேத்திக்கு சென்றுவிட்டு ஊருக்கு வந்து கொண்டி ருந்தார். அப்போது பரமக்குடியில் இருந்து எதிர்புறமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாய மடைந்த கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பாச் சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விபத்தை […]
ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி- அமைச்சர் மூர்த்தி
ஜல்லிக்கட்டு தொடர்பான தீர்ப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகளுக்கு கிடைத்த வெற்றி- அமைச்சர் மூர்த்தி மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டியில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனையை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு 2312 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 கோடியே 8 லட்சத்து 36 ஆயிரத்து 923 மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். ஜல்லிக்கட்டு தொடர்பாக சட்டசபையில் […]
பெண் அலுவலரிடம் செயின் பறித்த வாலிபர்கள்
பெண் அலுவலரிடம் செயின் பறித்த வாலிபர்கள் மதுரை அருகே மாத்தூர் குருத்தூரை சேர்ந்தவர் அமுதா (வயது52). இவர் சமூக நலத்துறையில் கிராம பெண்கள் நல அலுவலராக பணியாற்றி வருகிறார். சித்திரை திருவிழாவை யொட்டி நடக்கும் பொருட்காட்சியில் சமூக நலத்துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் இருந்து இரவு வீட்டுக்கு திரும்பினார். அவர் காந்தி மியூசியம் ரோட்டில் சென்றபோது பைக்கில் அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச்செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று […]
மதுரை திருமங்கலம் அருகே காரில் துப்பாக்கி- 113 தோட்டாக்கள் பறிமுதல்
மதுரை திருமங்கலம் அருகே காரில் துப்பாக்கி- 113 தோட்டாக்கள் பறிமுதல் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிமொழி, வனிதா மற்றும் போலீஸ்காரர் நாகராஜன் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குராயூர்-மொச்சிக்குளம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக ஒரு கார் வந்தது. மிகவும் மெதுவாக வந்த அந்த காருக்குள் இருந்தவர்கள் டார்ச்லைட்டை அடித்தபடி இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரை நிறுத்துமாறு சைகை காண்பித்துள்ளனர். போலீசாரை கண்டதும் காரில் வந்தவர்கள் […]
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளத்தில் கோர்ட்டு விசாரணையின் போது இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி
தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளத்தில் கோர்ட்டு விசாரணையின் போது இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி ஆலங்குளம் அருகே உள்ள கரும்பனூரை சேர்ந்தவர் கணேசன்(வயது 43). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ராஜாமணி என்பவருக்கும் இடையே கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இடம் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆலங்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. சம்பவத்தன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனை நீதிபதி ஆனந்தவள்ளி விசாரிக்க தொடங்கினார். அப்போது சாட்சி கூண்டில் நின்று […]
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரெயிலில் 22 கிலோ கஞ்சா கடத்தல்- வாலிபர் கைது
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரெயிலில் 22 கிலோ கஞ்சா கடத்தல்- வாலிபர் கைது ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரெயில் தண்டையார்பேட்டை பகுதியில் மெதுவாக சென்றபோது 2 வாலிபர்கள் திடீரென குதித்து பெரிய பையுடன் தண்டவாளத்தில் நடந்து சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த அங்கிருந்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். பிடிபட்ட மற்றொரு வாலிபரிடம் சோதனை செய்தபோது அவர் வைத்திருந்த பையில் 22 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் […]
கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் தயாராகி வரும் புதிய போலீஸ் நிலையம்
கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் தயாராகி வரும் புதிய போலீஸ் நிலையம் கோவை மாநகர எல்லைக்குட்பட்ட கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் பகுதிகளில் புதிய போலீஸ் நிலையங்கள் அமைப்பதற்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அந்த 3 பகுதிகளிலும் புதிய போலீஸ் நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோவை சுந்தராபுரத்தில் சிட்கோ இண்டோசல் மெயின் ரோட்டில்(பேஸ் டூ) போலீஸ் நிலையம் தயாராகி வருகிறது. இந்த போலீஸ் நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த போலீஸ் நிலையத்திற்கு […]
கோவையில் 3 பெண்களிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த வாலிபர்
கோவையில் 3 பெண்களிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த வாலிபர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாந்தி நகரை சேர்ந்தவர் ஜெயசுமா (வயது 41). அதே பகுதியை சேர்ந்த மதுமிதா (25), கல்பனா (46) இவர்கள் 3 பேரும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- நாங்கள் அனைவரும் உறவினர்கள். துணிக்கடை மற்றும் நகைக்கடைகளில் வேலை பார்த்து வருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமுகை ஜீவா நகரை சேர்ந்த மகேந்திரன் (40) என்பவர் அறிமுகமானார். […]
கடலூர் மாவட்டத்தில் 2133 மது பாட்டில்கள்- சாராயம் பறிமுதல்: 203 பேர் கைது
கடலூர் மாவட்டத்தில் 2133 மது பாட்டில்கள்- சாராயம் பறிமுதல்: 203 பேர் கைது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 10-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் பலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கடந்த 14-ம் தேதி முதல் […]