கிராம விழிப்புணர்வு காவலர்கள்(VVPO) மூலம் குற்றச் செயல்களை முற்றிலும் தடுக்க நடவடிக்கை-தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். தேனி மாவட்டம், பெரியகுளம் உட்கோட்ட காவல் நிலையத்தை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள், மற்றும் அந்தந்த கிராமத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள், ஆகியோர்களுக்கு குற்றச்சம்பவங்களை முற்றிலும் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் கிராம விழிப்புணர்வு காவல் அதிகாரிகளும் மற்றும் அந்த கிராம முக்கியஸ்தர்களும் […]
Day: January 7, 2021
ஆதரவின்றி இறந்து கிடந்தவரை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்த காவல்துறையினர்.
ஆதரவின்றி இறந்து கிடந்தவரை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்த காவல்துறையினர். 07:01:2021 இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் ஆதரவின்றி சுற்றித்திரிந்தவர் 06.01.2021-ம் தேதியன்று உடல்நிலை சரியில்லாமல் இறந்து கிடந்தார். உறவினர்கள் யாரும் உரிமை கோர வராத காரணத்தினால் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சுந்தரபாண்டியன் மற்றும் காவலர் திரு.பிரபு ஆகியோர் இறந்தவரின் உடலை முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர்.
சாலை விபத்தில் காயமடைந்தவரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பிய காவல்துறையினர்
சாலை விபத்தில் காயமடைந்தவரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பிய காவல்துறையினர் கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று மழையின் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக வந்த கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை ரோந்து காவலர்களான சிறப்பு உதவி ஆய்வாளர் திரு காதர்செரீப், முதல்நிலைக் காவலர் திரு. ராஜு, காவலர் திரு. ஹேம்நாத்குமார் ஆகியோர்கள் உடனடியாக ஓட்டுநரை பத்திரமாக மீட்டு முதலுதவி அளித்து மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு மனித நேயத்துடன் உதவிக்கரம் நீட்டிய காவலர்
மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு மனித நேயத்துடன் உதவிக்கரம் நீட்டிய காவலர் திருவண்ணாமலை மாவட்டம் பேருந்து நிலையம் அருகே மனநிலை பாதிக்கப்பட்டு ஆடையின்றி இருந்த நபருக்கு ஆயுதப்படை காவலர் திரு. இளஞ்செழியன் அவர்கள் புத்தாடை வாங்கி அணிவித்தார் மேலும் அவருக்கு உணவு வாங்கி கொடுத்து உதவிகரம் நீட்டினார். காவலரின் இந்த தன்னலமற்ற மனிதநேய செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு, கடும் குளிருக்கு சாலையோர மக்களுக்கு போர்வைகளை வழங்கிய காவலர்
இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு, கடும் குளிருக்கு சாலையோர மக்களுக்கு போர்வைகளை வழங்கிய காவலர் திருச்சி மாநகரப் பகுதியில் கடும் குளிருக்கு சாலையோரத்தில் உறங்கும் மக்கள் படும் துயரத்தை கண்ட ஆயுதப்படை காவலர் திரு. அரவிந்த் அவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட போர்வைகளை இரவு நேரங்களில் அவர்களுக்கு வழங்கி தன்னால் இயன்ற உதவியை செய்துள்ளார். இச்செயலை பார்த்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர் மற்றும் காவல் துறை மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.
மதுரை மாநகரில், போக்குவரத்துகாவல்துறை அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டுக்கள்
மதுரை மாநகரில், போக்குவரத்துகாவல்துறை அதிகாரிகளுக்கு குவியும் பாராட்டுக்கள் நேற்று 6 ம் தேதி இரவு பெய்த கனமழையின் காரணத்தால் திருப்பரங்குன்றம் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர், இதனால் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி. பால்தாய் மற்றும் பழங்காநத்தம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் திரு.லிங்கம்சாமி ஆகிய இருவரும் சேர்ந்து இன்று காலை போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்துக்கள் ஏற்படுமாறு இருந்த பள்ளங்களை தங்களின் சொந்த முயற்சியினால் டிராக்டர் மூலமாக […]
போக்குவரத்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு
போக்குவரத்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு நேற்று 06/01/2021, ம் தேதி இரவு பெய்த கன மழையின் காரணமாக கீழமாசி வீதி, கீழவெளிவீதி சந்திப்பில் உள்ள சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர், இதனால் தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. ரமேஷ் , மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு. உக்கிரபாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து இன்று காலை போக்குவரத்திற்கு இடையூறாகவும் விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையிலும் இருந்த பள்ளங்களை […]
மதுரை மாநகரில் சட்ட விரோதமாக நேற்று மது விற்பனை செய்த 8 பேரை கைது செய்த போலீசார் 56 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்
மதுரை மாநகரில் சட்ட விரோதமாக நேற்று மது விற்பனை செய்த 8 பேரை கைது செய்த போலீசார் 56 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர் மதுரை மாநகர் பகுதிகளில் மது கடைகள் திறப்பதற்கு முன்பாகவே சட்டவிரோதமாக டீ கடைகள், பொது இடங்களில் மது விற்பனை செய்த 8 பேரை நேற்று மதுரை மாநகர் காவல் துறை தரப்பில் கைது செய்யபபட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து 56 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள […]
மக்களின் புகார்களை விரைந்து முடிக்கும் சென்னை பெருநகர காவல் துறையினர்.
J6 திருவான்மியூர் காவல் நிலையம் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் செல்போன் பறிப்பு குற்றங்களை முற்றிலும் தடுக்க வேண்டி அத்தகைய குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ் குமார் அகர்வால் இ .க .பா அவர்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து கூடுதல் ஆணையாளர் (தெற்கு) திரு .தினகரன் இ. கா. பா அவர்கள் மற்றும் (தெற்கு )மண்டல இணை ஆணையாளர் […]
மதுரை தெப்பக்குளம் B3, காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளர்
மதுரை தெப்பக்குளம் B3, காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளர் மதுரை மாநகர் தெப்பகுளம் B3, காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் தல்லாகுளம் குற்றபிரிவுக்கு மாற்றப்பட்டார், கூடல் புதூர் காவல் நிலையத்தையும் கூடுதலாக கவனிப்பார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த இளஞ்செழியன் இங்கு தெப்பகுளம் காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்டார். என மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.