Police Recruitment

கொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.

கொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி. தாமரைப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் திருமதி மீனா க/பெ சசிகுமார் அவர்கள் வீட்டில் 20 சவரன் நகை கொள்ளை போனது சம்பந்தமாக கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி, வெங்கல் காவல் ஆய்வாளர் திருமதி. பத்மஸ்ரீ பாபி அவர்கள் மற்றும் தனிப்படை காவல் அதிகாரிகள் தீவிர விசாரணையின் போது உறவுக்காரரான கார்த்திக் என்பவர் வீட்டில் இருந்த […]

Police Recruitment

கோயம்புத்தூர் மாநகரில் உதவி ஆணையராக பொறுப்பேற்பு

கோயம்புத்தூர் மாநகரில் உதவி ஆணையராக பொறுப்பேற்பு கோயம்புத்தூர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரிகள் வேறு இடத்துக்கு மாறுதல் செல்ல தலைமைச் செயலாளர் அட்டவணையை பிறப்பித்துள்ளார். புதிய மாவட்டமாக ராணிப்பேட்டை தமிழ்நாடு அரசு அறிவித்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் எஸ்பியாக திரு. மயில்வாகணன் ஐபிஎஸ் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். பெரியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பிடித்தவாறு தன் கடமையை செய்தார். தற்போது கோவை மாநகர தலைமையிட உதவி ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Police Recruitment

இழந்த பணம் ரூ. 30,000 /- மீட்டு அவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார். உடன் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்

திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன ஈக்காடு பகுதியில் வசித்து வரும் மாற்றுத்திறனாளி யோகனந்தன் அவர்களிடம் ஆன்லைன் வர்த்தகத்தில் நூதன முறையில் பணம் ஏமாற்றப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவின்படி, தனிப்படை காவல் அதிகாரிகள் தீவிர விசாரணையின்போது 10 நாட்களில் அவர் இழந்த பணம் ரூ. 30,000 /- மீட்டு அவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

Police Recruitment

காரைக்குடியில் செயின் பறிப்பு போலீசில் சிக்கிய நடிகர்.

காரைக்குடியில் செயின் பறிப்பு போலீசில் சிக்கிய நடிகர். காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி குழந்தையம்மாள் 49. இவர் பிப்.14ம்தேதி அரியக்குடி சாலையில் நடைபயணம் சென்றார்,அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் குழந்தையம்மாளின் முகத்தில் ஸ்பிரே அடித்து விட்டு நான்கரை பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர். காரைக்குடி போலீசார் தீவிர விசாரணை செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடினர். செயின் திருட்டில் ஈடுபட்டது தேவகோட்டை கைலாசபுரத்தை சேர்ந்த கணேசன்மகன் சீனிவாசன் 39, என்பது […]

Police Recruitment

திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த பெண்ணின் இதயம் மதுரை to சென்னை விமானத்தில் பயணம். 7 பேர் புது வாழ்வு பெற உதவிய போக்குவரத்து காவல்துறையினர்

திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த பெண்ணின் இதயம் மதுரை to சென்னை விமானத்தில் பயணம். 7 பேர் புது வாழ்வு பெற உதவிய போக்குவரத்து காவல்துறையினர் திண்டுக்கல் மாவட்டம், பழனியை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி பிரமிளா வயது 52, இவர் பழனியில் ஒரு விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார், சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார், மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாக்ஷி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு கடந்த 20ம் தேதி இவர் மூளைச்சாவு அடைந்தார். […]

Police Recruitment

புலன்விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை பெரும் செலவுதொகையுடன் தள்ளுபடி செய்ய வேண்டும்….உயர்நீதிமன்றம்.

புலன்விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை பெரும் செலவுதொகையுடன் தள்ளுபடி செய்ய வேண்டும்….உயர்நீதிமன்றம். கோவையில் நடந்த மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் அந்த பணத்தை பெற்று வைத்ததாக தூத்துக்குடி சாத்தான்குளத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்போது தன்னை கோவை காவல்துறை அதிகாரிகள் சாலையில் வைத்து அடித்து வாகனத்தில் ஏற்றியதாக அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது… புலன்விசாரணை […]

Police Recruitment

வருமானமின்றி தவிக்கும் ஊர் காவல் படை, கண்டுகொள்ளுமா, அரசு?

வருமானமின்றி தவிக்கும் ஊர் காவல் படை, கண்டுகொள்ளுமா, அரசு? தமிழக காவல்துறைக்கு பேருதவியாக செயல்பட்டு வரும் ஊர் காவல் படை வீரர்கள் 16000 பேருக்கும் மேற்பட்டோர் ஊர் காவல் படை வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஏற்கனவே நாள் ஒன்றுக்கு ரூ.65/− வீதம் என இருந்ததை 2012 ம் ஆண்டில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களால் நாள் ஒன்றுக்கு ரூ.150/− என ஊதியத்தை உயர்த்தி மாதம் முழுவதும் 30 நாளும் வேலை கொடுத்ததால் மாதம் ஒன்றுக்கு […]

Police Recruitment

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஆவின்பாலகம்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஆவின்பாலகம் வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பார்லரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து வைத்து பார்வையிட்டார்(22.02.2021). Commissioner of Police inaugurates newly set up “Aavin Parlour” at Commissionerate premises (22.02.2021). சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் காவல் ஆணையாளர் அலுவலக அமைச்சுப்பணியளார்கள் மற்றும் காவல் ஆளினர்கள் ஆவின் பார்லர் ஏற்படுத்திட வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து. காவலர்கள், […]

Police Recruitment

உயிர் காக்க உரிய நேரத்தில் உதவிய போக்குவரத்து காவல்துறையினர்

உயிர் காக்க உரிய நேரத்தில் உதவிய போக்குவரத்து காவல்துறையினர் நேற்று 21.02.2021 ம் தேதி காலை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பழனியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் உள்நோயாளியாக உள்ள ஒருவருக்கு டிரான்ஸ் ப்ளான்டேஷன் செய்வதற்காக மதியம் 12.57 மணிக்கு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் 13.10 மணிக்கு மதுரை விமான நிலையத்தை சென்றடைந்தது. இதற்காக மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை […]

Police Recruitment

மதுரை மாவட்டம் ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் நலச் சங்கம், செயற்குழு கூட்டம்

மதுரை மாவட்டம் ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் நலச் சங்கம், செயற்குழு கூட்டம் மதுரைமாவட்ட ஓய்வுபெற்ற காவல்துறைஅலுவலர்நலச்சங்க செயற்குழுகூட்டம் 22.2.2021 மாலை 3 மணிக்கு நடைபெற்றது மறைந்த தலைவர் தெய்வத்திரு. கார்மேகம் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி அன்னாரது படத்தை அலுவலகத்தில் திறக்கப்பட்டது. தலைவர்பதவிக்கு D.C(RETD)திரு. ஜெய்சிங் அவர்களையும் செயலாளராக ADSP(RETD.) திரு.ஷாஜஹான் அவர்களையும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்