Police Department News

விருதுநகர் மாவட்டம்:- அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்கவும் கண்டுபிடிக்கவும் அருப்புக்கோட்டையில் ஆட்டோ ஓட்டுனர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம்:-அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்கவும் கண்டுபிடிக்கவும் அருப்புக்கோட்டையில் ஆட்டோ ஓட்டுனர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகரின் ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் பங்கேற்றனர்.குறிப்பாக சந்தேகபடும்படியாக உள்ளூர், வெளியூர் நபர்கள் ஆட்டோவில் ஏறி பயணிக்கும்போது அவர்களை பற்றிய விபரங்களை  காவல்நிலையத்தில் தெரிவிக்கவேண்டுமெனவும் அதற்கு ஏதுவாக நகர்காவல் நிலையத்தின் செல்போன் எண்களை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.அவ்வாறு கொடுக்கும் தகவல்கள் இரகசியமாக வைக்கப்படும் என்று ஆய்வாளர் தெரிவித்தார்.

Police Department News

தலைக்கவசம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் மீது வழக்கு

தலைக்கவசம் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் மீது வழக்கு செப். 28,கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் உள்ள நிலையில் பல வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல், உரிய ஆவணங்கள் இல்லாமலும், அதிக பாரம் ஏற்றி, போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்ற வாகனங்களால் விபத்துக்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. வெ.பத்ரி நாராயணன் IPS அவர்கள் வாகன சோதனையை தீவிரப்படுத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று நடைபெற்ற வாகன சோதனையில் தலைக்கவசம், உரிய ஆவனங்கள் […]

Police Department News

மதுரை, பனங்கல் ரோட்டில் மூதாட்டியிடம் நகை பறிப்பு, இரண்டு பெண்கள் கைது, ஒரு பெண் தப்பி ஓட்டம், தப்பியோடியவரை பிடிக்க போலீசார் வலை வீச்சு

மதுரை, பனங்கல் ரோட்டில் மூதாட்டியிடம் நகை பறிப்பு, இரண்டு பெண்கள் கைது, ஒரு பெண் தப்பி ஓட்டம், தப்பியோடியவரை பிடிக்க போலீசார் வலை வீச்சு திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியை சேர்ந்த ராமசாமி மனைவி சரோஜா வயது 60/21, இவர் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார்.இவரது கொழுந்தன் மகள் நந்தினி வயது 14/21, இவர் உடல் நலமில்லாமல் மதுரை மீனாட்சி மிஷின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் கடந்த 23 ம் தேதி இவரை பார்த்து நலம் […]

Police Department News

திருத்தணியில் பாரத் பந்த் ரயில் மறியல் செய்ய வந்த 140 பேர் கைது போராட்டம் செய்த வந்த பெண்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த போலீசார் பரபரப்பு.

திருத்தணியில் பாரத் பந்த் ரயில் மறியல் செய்ய வந்த 140 பேர் கைது போராட்டம் செய்த வந்த பெண்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்த போலீசார் பரபரப்பு. திருத்தணி ரயில் நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர், கரும்பு விவசாய சங்கத்தினர், ஆட்டோ தொழிலாளர்கள், திமுக தொழிற்சங்கமான எல்.பி.எஃப் போன்ற கட்சியினர், இணைந்து மத்திய அரசுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் போராட்டம் செய்தனர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்த இவர்களை போலீசார் கைது செய்தனர்

Police Department News

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் N.K.செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 26-09-2021 ம் தேதியன்று, தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேருந்துகளில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் சம்பந்தமாகவும், பெருகிவரும் போக்குவரத்து நெருக்கடிகளை சமாளிப்பது சம்பந்தமாகவும் பேருந்து நிறுத்தங்கள் […]

Police Department News

மதுரையில் செல் போன் திருடனை விரட்டிப் பிடித்த காவலர்கள்

மதுரையில் செல் போன் திருடனை விரட்டிப் பிடித்த காவலர்கள் சிவகங்கை மாவட்டம், சோழபுரத்தை சேரந்த சதாசிவம் மகன் சந்திரன் வயது 35/21, இவர் தன் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த 10 நாட்களாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 26 ம் தேதி சுமார் 12.30 மணியளவில் மருத்துவ மனையில் காத்திருப்போர் அறை அருகே தனது செல் போனில் பேசிக்கொண்டு நடந்து வரும் போது பின்னால் […]

Police Department News

மதுரையில், ஒரே நாளில் 34 ரவுடிகள் கைது, ஆயுதங்கள் பறிமுதல்

மதுரையில், ஒரே நாளில் 34 ரவுடிகள் கைது, ஆயுதங்கள் பறிமுதல் தமிழ் நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த சோதனை மேற்கொள்ள வேண்டும் என போலீஸ் டிஜிபி திரு. சைலேந்திரபாபு அவர்கள் உத்ரவிட்டுள்ளார் அதன் பேரில் மதுரை மாநகரில் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவில் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் விடிய விடிய ரவுடிகளை கைது செய்யும் பணியை போலீசார் […]

Police Department News

நடக்கவிருந்த கொலையை முன் கூட்டியே தடுத்த காவலர்கள், காவல் ஆணையர் பாராட்டு

நடக்கவிருந்த கொலையை முன் கூட்டியே தடுத்த காவலர்கள், காவல் ஆணையர் பாராட்டு எம்.கே.பி.நகர் பகுதியில், இரவு ரோந்து பணியின்போது விழிப்புடன் செயல்பட்டு கொலை குற்றத்தில் ஈடுபட இருந்த 3 நபர்களை கைது செய்து குற்றச்சம்பவம் நிகழாமல் தடுத்த, P-5 எம்.கே.பி.நகர் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 25.09.2021 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். P-5 எம்.கே.பி.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அ.கல்வியரசன், தலைமைக் காவலர் […]

Police Department News

உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு ADGP Dr.ஆபாஸ்குமார் ,IPS.,உட்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு

உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு ADGP Dr.ஆபாஸ்குமார் ,IPS.,உட்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு காவல் துறையில் உச்ச பதவியான டிஜிபி பதவிக்கு தமிழக காவல்துறை உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு ADGP ஆபாஸ்குமார், மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இந்நாள் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட 5 ஏடிஜிபிக்களுக்கு பதவி உயர்வு அளிக்க நிலை உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவுடன் சேர்த்து 11 டிஜிபிக்கள் […]