தென்மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம் பிடித்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தென் மண்டல அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் இன்று (28.08.2021) திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திரு. செந்தாமரை கண்ணன் IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டியில் 09 காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 02 உதவி காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் கலந்து கொண்ட தென்காசி […]
Month: August 2021
மணப்பெண் இணையதளத்தில் ஜொள்ளு விட்ட 20 ஆண்களிடம் பணம் அபேஸ்? திருமணமாகாத கவர்ச்சியான இளம்பெண் போல் பேசி பணம் பறித்துள்ளார்.
மணப்பெண் இணையதளத்தில் ஜொள்ளு விட்ட 20 ஆண்களிடம் பணம் அபேஸ்? திருமணமாகாத கவர்ச்சியான இளம்பெண் போல் பேசி பணம் பறித்துள்ளார். ஹைதராபாத், செகுந்தராபாத் சாயினிக்பூரி கண்டிகொண்டா பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் வாசுதேவன் வயது 34 என்பவர் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.இவர் தனக்கு திருமணம் செய்வதற்காக வரன் தேடும் ஒரு திருமண இணையதளத்தில் அழகான மணப்பெண் தேடியுள்ளார். அந்த இணைய தளத்தில் திவ்யா வயது 28 என்று ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் இருந்த ஐ.டியைப் […]
மேலூர் அருகே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
மேலூர் அருகே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் அவர்களின் அறிவுரையின்படி மேலூர் அருகே சருகுவலையபட்டி அரசு மேல் நிலை பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மதுரை மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. சந்திரமெளலி தலைமை தாங்கினார். சருகுவலையாபட்டியைசுற்றியுள்ள கிராமபுற பெண்களிடம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் […]
மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து; உ.பி. தொழிலாளி பலி:
மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து; உ.பி. தொழிலாளி பலி: மதுரை நாராயணபுரத்தில் 7 கி.மீ., தொலைவிற்கு ரூ.679.98 கோடியில் தமிழகத்திலேயே மிக நீளமாக கட்டப்படும் பறக்கும் பாலம் கட்டுமானப்பணியில் 35 மீட்டர் நீளம் கொண்ட இணைப்புப் பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில், உத்திரப் பிரதேச தொழிலாளர் ஒருவர் இடிபாடுகளில் சிக்கி பலியானார். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது. மதுரையிலிருந்து நத்தம் வரை மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 28 கி.மீ., தொலைவிற்கு […]
போலீசார் முன்பு நடனமாடி இளம் பெண் ரகளை.
போலீசார் முன்பு நடனமாடி இளம் பெண் ரகளை. சென்னை சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் முககவசம் அணியாமல் நடைமேடையில் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரெயில் நிலையத்தில் பணியில் இருந்த டிக்கெட் பரிசோதகர், அந்த பெண்ணுக்கு அபராதம் விதித்தார். இதையடுத்து அந்த இளம்பெண் கையில் வைத்திருந்த முககவசத்தை அணிந்து கொண்டு, அபராதம் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், டிக்கெட் பரிசோதகர் தொடர்ந்து அபராதம் விதித்ததில் உறுதியாக இருந்தார். இதனால், அந்த இளம்பெண், டிக்கெட் பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் […]
மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பேரளம் காவல் நிலையம் தமிழக அரசின் பாராட்டு
மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பேரளம் காவல் நிலையம்தமிழக அரசின் பாராட்டு மாவட்ட அளவில் காவல் நிலையங்களில் அதிக அளவில்குற்ற வழக்குகளை நீதிமன்றங்களில் முடித்தல்,பிடிக்கட்டளை நிறைவேற்றுதல்,காவல் நிலையத்தினை சுகாதாரமான முறையில் பராமரித்தல் உள்ளிட்ட நடைமுறை பணிகளை சிறப்பாக செய்து செயல்பட்டுமாவட்ட அளவில் முதலிடம் பெற்றபேரளம் காவல் நிலையத்திற்குதமிழக அரசால்2019 – 2020 ஆண்டிற்கான கோப்பை(TROPHY) வழங்கப்பட்டது. இன்று (28.08.2021)மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள்பேரளம் காவல் ஆய்வாளர் திரு.மணிமாறன்என்பவரைநேரில் அழைத்துகோப்பையை வழங்கி பாராட்டினார்கள்
திருவாரூர் மாவட்ட காவல் ஆய்வாளருக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு.
திருவாரூர் மாவட்ட காவல் ஆய்வாளருக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு. காவல்துறை-மத்திய மண்டலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில்(HOTSPOT) அதிகளவில் விழிப்புணர்வு முகாம்களை சிறப்பான முறையில் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி குற்றச் சம்பவங்களை குறைக்க நடவடிக்கை எடுத்த திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் செல்வி.ஷர்மிளாஎன்பவரைதிருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS அவர்கள் இன்று(27.08.21)நேரில் அழைத்து பாராட்டினார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உதவி ஆய்வாளர் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து கூறினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உதவி ஆய்வாளர் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து கூறினார் 2019 ஆண்டிற்கான நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கு தூத்துக்கு மாவட்டத்தில், தூத்துக்குடி நகர உட் கோட்டத்தில் மாரிமுத்து, பரமசிவம் ஆகிய இரண்டு பேரும் ஊரக உட்கோட்டத்தில் வெங்கடாஜலப்பெருமாள், தரண்யா, மற்றும் மேகலா, ஆகிய 3 பேரும் மணியாச்சி உட்கோட்டத்தில், […]
கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூர், கொட்டாரக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மகேந்திரன் வயது 36 என்பவர் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கல்லிடைக்குறிச்சி, காவல் ஆய்வாளர், […]
அடிதடி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.
அடிதடி மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம், வி.கே. புரம், அயன்திருவாலீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் என்பவரின் மகன் மூக்காண்டி வயது 44 என்பவர் அடிதடி மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்கள் கவனத்திற்கு வந்ததால் எதிரியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க […]