கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்த அமைச்சுப் பணியாளர் சாமிநாதன் அவர்களின் திருவுருவ படத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மற்றும் காவல் அதிகாரிகள் ஆணையரகத்தில் மலரஞ்சலி செலுத்தினர். (22.10.2020 ) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (22.10.2020) காலை நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், சென்னை காவல் ஆணையரகத்தில் பதிவறை உதவியாளராக பணிபுரிந்து வந்த திரு.K.S.சாமிநாதன் (58) என்பவர் கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று […]
Month: October 2020
உசிலம்பட்டி, காவலர்கள் இடமாற்றம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி
உசிலம்பட்டி, காவலர்கள் இடமாற்றம் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் சரகத்திற்கு உட்பட்ட உசிலம்பட்டி நகர் காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், மற்றும் எழுமலை காவல் நிலையம், SI & காவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்படி உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றிய ராமர் எஸ்.எஸ்.ஐ அவர்களை சிந்துபட்டி காவல் நிலையத்திற்கும், நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய குணபாலன் […]
பானாவரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்டா புத்தகம் மூலம் மூத்த குடிமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான அரிசி, பழங்கள்,காய்கறிகள், கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் ஆகியவற்றை வழங்கினார்.
பானாவரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பட்டா புத்தகம் மூலம் மூத்த குடிமக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான அரிசி, பழங்கள்,காய்கறிகள், கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் ஆகியவற்றை வழங்கினார். இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களின்(Senior Citizens) பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அவர்களுக்கு உதவும் விதமாகவும் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களால் கடந்த (28.09.2020) ” WE FOR YOU […]
காவலர் வீர வணக்க நாள் நெகிழ வைத்த தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு.சி.முருகன் I.P.S அவர்கள்
காவலர் வீர வணக்க நாள் நெகிழ வைத்த தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு.சி.முருகன் I.P.S அவர்கள். 1959-ம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க […]
காணாமல் போன முதியவரை கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் துறையினர்
காணாமல் போன முதியவரை கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் துறையினர் மதுரை மாநகர், திடீர் நகர் C1, சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் திரு முருகேசன் அவர்கள் 19/10/2020 ம் தேதி அலுவல் சம்பந்தமாக காவல் நிலையத்தில் இருந்த போது, சுமார் இரவு 8 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, இரயில்வே நிலையம் எதிரே உள்ள பேரூந்து நிறுத்தத்தில் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் நிலையப்பொறுப்பிலிருந்த த.கா.3626, கிருஷ்ணமூர்த்தியுடன், உயர் […]
மதுரை கிளை, சென்னை உயர் நீதி மன்றம், சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த அமரர் உமாசங்கர் அவர்களுக்கு, மதுரை, கோ.புதூர் காவல் நிலையம் சார்பாக நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மதுரை கிளை, சென்னை உயர் நீதி மன்றம், சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்த அமரர் உமாசங்கர் அவர்களுக்கு, மதுரை, கோ.புதூர் காவல் நிலையம் சார்பாக நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மதுரை, கோ.புதூர், சங்கர் நகர், மூன்றாவது தெருவில் இவரது இல்லத்தில் கோ.புதூர், காவல் நிலைய காவலர்கள் அனைவரும், ஆய்வாளர் திருமதி திலகவதி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. ஜெய்சங்கர் அவர்களின் தலைமையில் நீத்தார் நினைவு அஞ்சலி செலுத்தினார்கள்.
உயிர் நீத்த காவலர்களுக்கு திருப்பத்தூரில் அஞ்சலி
உயிர் நீத்த காவலர்களுக்கு திருப்பத்தூரில் அஞ்சலி திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில் தேசிய காவலர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உயிர் நீத்த காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. திருப்பத்தூர் அடுத்த பாச்சல் பகுதியில் உள்ள ஆயுதப் படை மைதானத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்து கொண்டார். தமிழகத்தில் வீரமரணமடைந்த 264 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலர் வளையம் […]
கிராமப்புற பகுதிகளுக்கு நேரடியாக சென்று கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
கிராமப்புற பகுதிகளுக்கு நேரடியாக சென்று கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் கன்னிவாடி காவல் ஆய்வாளர் அவர்கள். 21.10.2020திண்டுக்கல் மாவட்டம். கன்னிவாடி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட நெட்டியபட்டி, நடுப்பட்டி கிராமங்களுக்கு கன்னிவாடி காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்கள் நேரடியாக சென்று கொரோனா வைரஸ் நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பது பற்றியும், இன்றைய […]
காவலர் வீர வணக்க நாள்- டிஜிபி திரிபாதி மரியாதை
சென்னை: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. காவலர் வீரவணக்க நாளான இன்று டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு சின்னத்தின் முன் டிஜிபி திரிபாதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். நீத்தார் நினைவு தினத்தையொட்டி அரியலூர், நாகை உள்பட தமிழகம் முழுவதும் காவல் […]
காவலர் வீர வணக்கம் நாள், காவலர்கள் நினைவு கல்வெட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்
காவலர் வீர வணக்கம் நாள், காவலர்கள் நினைவு கல்வெட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார் சென்னை : வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவு கல்வெட்டை முதலமைச்சர் எடப்பாடி திறந்து வைத்தார். நாடு முழுவதும் நேற்று வீரமரணம் அடைந்த காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் 1962ம் ஆண்டு முதல் வீரமரணம் அடைந்த 151 காவலர்களின் உருவம் பொறித்த கல்வெட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]