Police Department News

கொரோனா பாதிப்பு குறையாததால் கட்டுப்பாடுகள்: ‘வேடம் அணியும் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் வர வேண்டாம்’

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்கள், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், உடன்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், தாசில்தார் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற தசரா குழுவினர், பொதுமக்கள் பேசுகையில், ‘1, 10, 11-ம் […]

Police Department News

காணாமல் போன 102 செல்போன்கள் மீட்பு உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஒப்படைத்தார்

தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுவரை செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்கள் மூலம் செல்போன்களின் இருப்பிடத்தை கண்டறிந்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான 102 செல்போன்களை மீட்டனர். ஒப்படைப்பு இந்த செல்போன்களை உரியவர்களிடம் […]

Police Department News

மதுரை மாவட்டத்தில், உங்கள் குறைகளை கேட்க ” உங்களைத் தேடி” எனற திட்டம் அறிமுகம்.

மதுரை மாவட்டத்தில், உங்கள் குறைகளை கேட்க ” உங்களைத் தேடி” எனற திட்டம் அறிமுகம். மதுரை மாவட்டத்தில் ‘உங்கள் குறைகளை கேட்க உங்களை தேடி’ என்ற திட்டத்தின் கீழ் புகார் தெரிவித்தால் நேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு எஸ்.பி., சுஜீத்குமார் உத்தரவிட்டுள்ளார். சமீபகாலமாக கொலை, கொள்ளை, அரிவாள் வெட்டு போன்ற சம்பவங்களில் மட்டும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரிக்கின்றனர். மற்ற புகார்களை ஸ்டேஷனில் இரு தரப்பையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கின்றனர். இதில் சாட்சிகளிடம் […]

Police Department News

மதுரை, திடீர் நகர் பகுதியில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இடத்தில் மனைவியை தாக்க முயற்ச்சித்த கணவன் மீது வழக்கு பதிவு

மதுரை, திடீர் நகர் பகுதியில், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த இடத்தில் மனைவியை தாக்க முயற்ச்சித்த கணவன் மீது வழக்கு பதிவு மதுரை, ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் வினோத் இவரது மனைவி பாலசரஸ்வதி. கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, இந்த நிலையில் மனைவி மதுரை, தெற்கு அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் கணவரை விசாரணை நடத்த காவல் நிலையத்தினர் அழைத்திருந்தனர். அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் […]

Police Department News

காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 பேருக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது

காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 பேருக்கு பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது 11.10.2020 இராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 15 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் வழக்குகளை முறையாக புலனாய்வு செய்து வழக்கு நாட்குறிப்பு எழுதுவதில் சிறப்பாக செயல்பட்ட பரமக்குடி காவல் துணை […]

Police Department News

மாம்பலம் ரெயில் நிலையத்தில் 40 பவுன் நகை பையை தவறவிட்ட பயணி ரெயில்வே பாதுகாப்புப்படையினர் மீட்டு ஒப்படைத்தனர்

சென்னை, ஊரடங்கால் வழக்கமான ரெயில் சேவைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. ஆனால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில், மாம்பலத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, 2 நிமிடத்துக்கு பிறகு எழும்பூருக்கு புறப்பட்டது. ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் சென்ற பின்னர், ஒரு பை மட்டும் கேட்பாரின்றி நடைமேடை எண் 4-ல் […]

Police Department News

காஞ்சீபுரத்தில் 6 மாதங்களாக பதுங்கியிருந்த இலங்கையை சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது

செங்கல்பட்டு, இலங்கையில் நடந்த பல்வேறு கொலை மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய கட்டகாமினி என்கிற பொன்சேகா அழாகாப்பெரும்மக சுனில் ஜெமினி என்பவரை அந்த நாட்டு போலீசாரும், தமிழக போலீசாரும் தேடி வந்தனர். இவரது பின்னணியிலேயே நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும், பல சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கையில் மரண தண்டனை வழங்கப்படுகிறது. எனவே இலங்கையில் இருந்து தப்பிய கட்டகாமினி தமிழகத்தில் தஞ்சம் […]

Police Department News

மணல் கடத்தல் கும்பலுக்காக திருடப்பட்ட 31 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு; 7 பேர் கைது

நெல்லிக்குப்பம், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருடு போயின. இதுபற்றி நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தவச்செல்வம், ஆனந்தன், தீபன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே பண்ருட்டி பகுதியை சேர்ந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நடுவீரப்பட்டு, […]

Police Department News

மதுரை, சிம்மக்கல், பகுதியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை திலகர் திடல் போலீசார் விசாரணை.

மதுரை, சிம்மக்கல், பகுதியில் நகைக்கடை உரிமையாளர் கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை திலகர் திடல் போலீசார் விசாரணை. மதுரை, திலகர் திடல் C4, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான சிம்மக்கல் ஒர்க்ஷாப் ரோடு, தேவி தியேட்டர் காம்ளக்ஸில் வசித்து வருபவர் ரெங்கநாதன் மனைவி அமுதா வயது 52/2020, இவர் குடும்பத்துடன் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறார் இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர், மகன் வினோத் கண்ணன் சென்னை நுங்கம்பாக்கத்தில் மாருதி சுஜிகி கார் கம்பெனியில் […]

Police Department News

பொதுமக்களின் உயிரை குடிக்கும் கொரோனாவை விரட்டும் போரில் தென்னக ஜான்சிராணியாக திகழும் அம்மையார் மரியாதைக்குரிய க.ராணி அவர்கள் போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு ஆய்வாளர் மவுண்ட் ஸ்டேஷன்

பொதுமக்களின் உயிரை குடிக்கும் கொரோனாவை விரட்டும் போரில் தென்னக ஜான்சிராணியாக திகழும் அம்மையார் மரியாதைக்குரிய க.ராணி அவர்கள் போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு ஆய்வாளர் மவுண்ட் ஸ்டேஷன் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் மவுண்ட் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள ஈச்சங்காடு சிக்னல், காமாட்சி மருத்துவமனை சிக்னல், குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் சிக்னல், மீனம்பாக்கம் சிக்னல் போன்ற இடங்களில் பாதசாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், வாகன ஓட்டிகள், வாலிபர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், தனியார் […]