100க்குமேற்பட்டஆதரவற்றவர்களுக்கு_ உணவுவழங்கியஉதவி_ ஆய்வாளர் ஆகஸ்ட் 30, திருப்பூர் மாநகரம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலை ஓரங்களிலும் பேருந்து நிலையங்களிலும் வாழும் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் #திருபிரகாஷ் அவர்கள் தலைமையில் உதவி ஆய்வாளர் #திருசிவகுமார் அவர்கள் மதிய உணவு பொட்டலங்களை வழங்கினார்.இச்செயலை செய்த ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை மாநகர காவல் ஆணையர் #உயர்திருககார்த்திகேயன் (#இகாப) அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். போலீஸ் […]
Day: August 30, 2020
காவலருக்கு குவியும் பாராட்டு
காவலருக்கு குவியும் பாராட்டு திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய ரோந்து பணியில் இருந்த முதல் நிலை காவலர் திரு.ஆனந்தம் அவர்கள் ஊத்துக்குளி சாலையில் ரோந்து பணியில் இருக்கும் போது அவ்வழியாக வந்த முதியவரை அழைத்து விசாரணை செய்தார் விசாரணையில் அவர்கள் சரோஜா என்பதும் சாமுண்டிபுரம் எம்.ஜி.ஆர் நகர் என்ற பகுதியில் இருந்து வந்ததாகவும் அவர்கள் தனது முகவரி தெரியாமல் அலைந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் அந்த காவலர் வேலம்பாளையம் காவல் நிலையத்திற்கு அலைபேசியின் மூலம் அழைப்பு […]
செல்போன் கடையை உடைத்து செல்போன்கள் மற்றும் பொருள்கள் திருட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
செல்போன் கடையை உடைத்து செல்போன்கள் மற்றும் பொருள்கள் திருட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சிலுக்குவார்பட்டியை சேர்ந்த ராஜாராம் மகன் சிவமுத்து வயது( 30) செல்போன்கள் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணி அளவில் கடையை பூட்டி விட்டு வழக்கம்போல் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சிவமுத்துக்கு தொலைபேசி மூலம் கடை உடைக்கப்பட்டுள்ளது […]
காரில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில் கடத்தியதாக சூப்பர்வைசர் உள்பட 2 பேர் கைது.
காரில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில் கடத்தியதாக சூப்பர்வைசர் உள்பட 2 பேர் கைது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி டாஸ்மார்க்கில் மேலாளர் வேலை பார்ப்பவர் வேல்மணி வயது (49) இவருக்கு சொந்த ஊர் திண்டுக்கல் அருகே உள்ள கும்மனம்பட்டியைச் சேர்ந்தவர். குமரம்பட்டி அருகே உள்ள பஞ்சம்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் செந்தில்குமார் என்பவரை அழைத்து நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் தனது டாஸ்மார்க் கடையில் இருந்து 396 மதுபான பாட்டில்களை காரில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஶ்ரீவைகுண்டம் பகுதியில் பிரபல ரவுடி முருகன் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் ஶ்ரீவைகுண்டம் பகுதியில் பிரபல ரவுடி முருகன் கைது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ரவுடித்தனம் செய்து, பொதுமக்களை அச்சுறுத்தி வந்த, பல கொலை, கொள்ளை வழக்குளில் ஈடுபட்ட பிரபல ரவுடி முருகன் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிரடி நடவடிக்கை. தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தீவரமாக கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு தனிப்படைகள் அமைத்துள்ளார். […]
காவல் ஆய்வாளர் அவர்களின் மனித நேயம்
காவல் ஆய்வாளர் அவர்களின் மனித நேயம் மதுரை மாவட்டம் மகபூப்பாளையத்தைச் சேர்ந்தவர் இப்ராகிம்ஷா (வயது 54). இவர் கஞ்சா விற்பனை செய்து வந்தார். இதனால் போலீசார் அவரை அடிக்கடி கைது செய்வதும் பின்னர் ஜாமீனில் விடுவிப்பதும் தொடர் கதையாகி வந்தது. இப்ராகிம்ஷா மீது திலகர் திடல், திடீர்நகர், ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இவர் திருந்தி வாழ ஆய்வாளர் பிளவர் ஷீலா, அவர்கள் சில முயற்சிகளை எடுத்தார், இப்ராகிம்ஷா, திலகர் திடல் […]
கடும் வெயிலில் கொரோனா விழிப்புணர்வு நீலாங்கரை போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் கண்ணா அவர்கள்
கடும் வெயிலில் கொரோனா விழிப்புணர்வு நீலாங்கரை போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் கண்ணா அவர்கள். மதிப்பிற்குரிய D.G.P திரிபாதி I.P.S மற்றும் சென்னை ஆணையர் மதிப்பிற்குரிய மகேஷ்குமார்அகர்வால் I.P.S அவர்கள் உத்தரவுபடி அதிவேகமாக சென்னையில் கொரோனா பரவுவதையொட்டி நீலாங்கரை E.C.R சாலையில் வாகன சோதனையில் வாகன ஓட்டிகளிடமும் திரு.ராஜேஷ்கண்ணா அவர்கள் நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் அரசு ஆணைப்படி மக்களின் நல்வாழ்விற்காக கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.வாகன ஓட்டிகளிடம் முககவசம் உரிய ஆவணங்கள் இருக்கிறதா என்றும் சரிபார்க்கபட்டு பின்னர் […]
தானியங்கி போக்குவரத்து சிக்னலை மதுரைமாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த சின்ஹா அவர்கள் திறந்து வைத்தார்கள்
தானியங்கி போக்குவரத்து சிக்னலை மதுரைமாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த சின்ஹா அவர்கள் திறந்து வைத்தார்கள் சாலை விபத்துக்களை தடுக்கவும், அதிகமான வாகன ஓட்டங்களை கண்காணிக்கவும், மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு முறையை உறுதி செய்வதற்கும் சிந்தாமணி சாலை − ரிங் ரோட்டின் சந்திப்பில் சென்ற 28 ம் தேதி 17.30 மணியளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி போக்கு வரத்து சிக்னலை மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் திறந்து வைத்தார். […]